ஆப்நகரம்

அதிரடி காட்டும் தருமபுரி ஆட்சியர்... அதிர்ச்சியில் அரசியல் கட்சிகள்!

தருமபுரி நகராட்சி மற்றும் 10 பேரூராட்சிகளில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக புகார் தெரிவிக்க தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது.

Samayam Tamil 29 Jan 2022, 5:58 pm
தருமபுரி மாவட்டத்தில் ஒரு நகராட்சி, 10 பேரூராட்சிகளில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ம் தேதி நடக்கவுள்ளது. தேர்தல் தொடர்பாக பொதுமக்களிடமிருந்து வரும் புகார்களை பெற்று, சம்மந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கும் வகையில், ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இந்த அறையானது 24 மணி நேரமும் செயல்படும்.
Samayam Tamil dharmapuri collector divyadharshini


நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக பொதுமக்கள் தங்களது புகார்களை 04342-230849 என்ற எண்ணில் தொடர்புகொண்டு தெரிவிக்கலாம். மேலும், தர்மபுரி நகராட்சி மற்றும் 10 பேரூராட்சிகளின் தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகங்களிலும், 24 மணிநேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தங்களது புகார்களை சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் அமைக்கபட்டுள்ள கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொண்டு தெரிவிக்கலாம்.

தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகம் தொலைபேசி எண்கள் விபரம் -

தருமபுரி நகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் ஆணையர் அலுவலகம் - 04342 - 260910, அரூர் பேரூராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகம் - 04346 - 222037, கடத்தூர் பேரூராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகம்- 04346-265008, பாப்பாரப்பட்டி பேரூராட்சி - 04342- 248048, பென்னாகரம் பேரூராட்சி- 04342 -254073, கம்பைநல்லூர் பேரூராட்சி - 04346- 267460, பி.மல்லாபுரம் பேரூராட்சி - 04346 244437, பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சி - 04346 246462, பாலக்கோடு பேரூராட்சி - 04348 222002, காரிமங்கலம் பேரூராட்சி - 04348 241248, மாரண்டஅள்ளி பேரூராட்சி - 04348 233355 எண்களில் புகார்கள் தெரிவிக்கலாம் என ஆட்சியர் திவ்யதர்ஷினி அறிவித்துள்ளார்.

அடுத்த செய்தி