தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த ஏரியூர் அருகே உள்ள இராம கொண்ட அள்ளியில் அமைந்துள்ள ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவில், இராம கொண்ட அள்ளி, சந்தன கொடிக்கால், ஆலமரத்தூர், குட்டமடுவு, கானிக்காடு, சிங்கிலிமேடு, கவுண்டனூர் உள்ளிட்ட 9 கிராம மக்களுக்கு சொந்தமானது. இராம கொண்ட அள்ளியில் அமைந்துள்ள ஸ்ரீ சக்தி மாரியம்மன், ஸ்ரீ கற்பக விநாயகர், சிவன், அம்பாள், மற்றும் நவகிரகங்கள் ஆகிய ஐந்து ஆலயங்கள் தற்போது புதுப்பிக்கப்பட்டு பிரமாண்ட கோபுரங்கள் எழுப்பப்பட்டுள்ளது. இந்த ஐந்து ஆலயங்களுக்கு கோவில் கும்பாபிஷேக விழா வருகின்ற வியாழக்கிழமை நடைபெற உள்ளது.
விழாவை முன்னிட்டு நாகமரை காவிரி ஆற்றிலிருந்து தீர்த்த குடம் எடுத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. நூற்றுக்கணக்கானவர்கள் தீர்த்தக்குடம், பால்குடம் எடுத்து பக்தி பரவசத்துடன் ஊர்வலம் வந்தனர். இதில் உற்சவ அம்மன் சிலையை அலங்கரித்து, பம்பை மேளதாளம் முழங்க, வாணவேடிக்கையுடன் ஊர்வலம் எடுத்து வரப்பட்டது.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
மேலும் கோபுரத்தில் நிறுவப்பட உள்ள கலசம் மற்றும் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. இதில் உள்ளூர் பொதுமக்கள் மட்டுமல்லாமல் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு காவிரி ஆற்றிலிருந்து தீர்த்தக்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர்.
பாஜகவில் ஊழலே இல்லை... அடித்துச்சொன்ன அர்ஜுன் சம்பத்!
வருகின்ற வியாழக்கிழமை வரை ஐந்து கால யாக பூஜைகள் நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து வருகின்ற வியாழக்கிழமை காலை ஸ்ரீ சக்தி மாரியம்மன், ஸ்ரீ கற்பக விநாயகர், சிவன், அம்பாள், மற்றும் நவகிரகங்கள் ஆகிய ஐந்து ஆலய கோவில் கோபுர கலசங்களுக்கு, சிவாச்சாரியார்கள் தங்கள் திருக்கரங்களால் புனித நீர் ஊற்றி, மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
தொடர்ந்து அபிஷேக பூஜையும் அன்னதானமும் நடைபெற உள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
விழாவை முன்னிட்டு நாகமரை காவிரி ஆற்றிலிருந்து தீர்த்த குடம் எடுத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. நூற்றுக்கணக்கானவர்கள் தீர்த்தக்குடம், பால்குடம் எடுத்து பக்தி பரவசத்துடன் ஊர்வலம் வந்தனர். இதில் உற்சவ அம்மன் சிலையை அலங்கரித்து, பம்பை மேளதாளம் முழங்க, வாணவேடிக்கையுடன் ஊர்வலம் எடுத்து வரப்பட்டது.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
மேலும் கோபுரத்தில் நிறுவப்பட உள்ள கலசம் மற்றும் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. இதில் உள்ளூர் பொதுமக்கள் மட்டுமல்லாமல் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு காவிரி ஆற்றிலிருந்து தீர்த்தக்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர்.
பாஜகவில் ஊழலே இல்லை... அடித்துச்சொன்ன அர்ஜுன் சம்பத்!
வருகின்ற வியாழக்கிழமை வரை ஐந்து கால யாக பூஜைகள் நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து வருகின்ற வியாழக்கிழமை காலை ஸ்ரீ சக்தி மாரியம்மன், ஸ்ரீ கற்பக விநாயகர், சிவன், அம்பாள், மற்றும் நவகிரகங்கள் ஆகிய ஐந்து ஆலய கோவில் கோபுர கலசங்களுக்கு, சிவாச்சாரியார்கள் தங்கள் திருக்கரங்களால் புனித நீர் ஊற்றி, மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
தொடர்ந்து அபிஷேக பூஜையும் அன்னதானமும் நடைபெற உள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.