தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த பிளியனூர் கிராமத்தில் அஇஅதிமுக மாநில விவசாயப்பிரிவு தலைவர் டி.ஆர்.அன்பழனுக்கு சொந்தமான தார் பிளான்ட் (tar mixing plant) தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையால் அப்பகுதியை சுற்றியுள்ள விவசாய நிலங்கள் பாதிக்கபடுவதாகவும், சுகாதாரமான குடிநீர் மற்றும் கால்நடைகளுக்கு தேவையான புல் தீவனம் உள்ளிட்டவைகள் பாதிக்கபடுவதாக கூறப்படுகிறது. மேலும், அந்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கு கண் எரிச்சல், உடல் அரிப்பு, வாந்தி, தலைவலி உட்பட பல்வேறு உடல் உபாதைகளால் அவதியடைந்து வருவதாக கடந்த 8 ஆண்டுகளாக மாவட்ட நிர்வாகத்திடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சி என்பதால் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அதிகாரிகள் காலம் தாழ்த்தி வந்துள்ளனர். இந்நிலையில், பாதிக்கபட்ட விவசாயி முருகேசன் என்பவர் தார் பிளாண்ட்டை தடை செய்யகோரியும், அதன் உரிமையாளர் அதிமுக பிரமுகர் டி.ஆர். அன்பழகன் மீது தக்க நடவடிக்கை எடுக்ககோரி அண்மையில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
சாம்சங் கேலக்ஸி M32 வெல்ல அட்டகாசமான வாய்ப்பு. இந்த படிவத்தை பூர்த்தி செய்து பல கவர்ச்சிகரமான பரிசுகளை வெல்லுங்கள்
இந்நிலையில், முருகேசன் புகார் மனு மீது விசாரணை நடத்த ஆட்சியர் உத்தரவிட்டார். விசாரணையில் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ள நிரூபனமாகியுள்ளது. பின்னர் மாவட்ட ஆட்சியர் உத்திரவின் பேரில், காவல்துறையினர் பாதுகாப்புடன் சென்ற சுற்றுசூழல் துறை அதிகாரி்கள் தார் தொழிற்சாலையை மூடி சீல் வைத்தனர்.
தனக்கு சொந்தமான ஜல்லி கிரஷரில் பணிபுரிந்த ஜெல்மாரம்பட்டி கிராமத்தை சேர்ந்த முத்துவேல், சுரேஷ் ஆகிய இருவரை கட்டி வைத்து தாக்கியதாக அளிக்கப்பட்ட புகாரில் கடந்தாண்டு டி.ஆர்.அன்பழகன் கைது செய்யப்பட்ட நிலையில் உடல்நிலையை காரணம் காட்டி ஜாமீன் பெற்றார். டி.ஆர்.அன்பழகன் முன்னாள் முதலமைசர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் ஆகியோரின் தீவிர விசுவாசி என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சி என்பதால் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அதிகாரிகள் காலம் தாழ்த்தி வந்துள்ளனர். இந்நிலையில், பாதிக்கபட்ட விவசாயி முருகேசன் என்பவர் தார் பிளாண்ட்டை தடை செய்யகோரியும், அதன் உரிமையாளர் அதிமுக பிரமுகர் டி.ஆர். அன்பழகன் மீது தக்க நடவடிக்கை எடுக்ககோரி அண்மையில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
சாம்சங் கேலக்ஸி M32 வெல்ல அட்டகாசமான வாய்ப்பு. இந்த படிவத்தை பூர்த்தி செய்து பல கவர்ச்சிகரமான பரிசுகளை வெல்லுங்கள்
இந்நிலையில், முருகேசன் புகார் மனு மீது விசாரணை நடத்த ஆட்சியர் உத்தரவிட்டார். விசாரணையில் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ள நிரூபனமாகியுள்ளது. பின்னர் மாவட்ட ஆட்சியர் உத்திரவின் பேரில், காவல்துறையினர் பாதுகாப்புடன் சென்ற சுற்றுசூழல் துறை அதிகாரி்கள் தார் தொழிற்சாலையை மூடி சீல் வைத்தனர்.
தனக்கு சொந்தமான ஜல்லி கிரஷரில் பணிபுரிந்த ஜெல்மாரம்பட்டி கிராமத்தை சேர்ந்த முத்துவேல், சுரேஷ் ஆகிய இருவரை கட்டி வைத்து தாக்கியதாக அளிக்கப்பட்ட புகாரில் கடந்தாண்டு டி.ஆர்.அன்பழகன் கைது செய்யப்பட்ட நிலையில் உடல்நிலையை காரணம் காட்டி ஜாமீன் பெற்றார். டி.ஆர்.அன்பழகன் முன்னாள் முதலமைசர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் ஆகியோரின் தீவிர விசுவாசி என்பது குறிப்பிடத்தக்கது.