ஆப்நகரம்

ஆசிரியர்கள் தினவிழா; எஸ்.பி நேரில் வாழ்த்து!

தருமபுரி மாவட்டத்தில் ஆசிரியர் தினத்தையொட்டி ஆசிரியர்களை பாராட்டிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் மரக்கன்று நட்டு வைத்து ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணியினை தொடங்கி வைத்தார்.

Samayam Tamil 5 Sep 2021, 8:35 pm
தருமபுரி மாவட்டத்தில் ஆசிரியர் தினத்தையொட்டி ஆசிரியர்களை பாராட்டிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் மரக்கன்று நட்டு வைத்து ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணியினை தொடங்கி வைத்தார்.
Samayam Tamil மரக்கன்று நடப்படுகிறது
மரக்கன்று நடப்படுகிறது


தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த ஏர்ரபையனஹள்ளி பகுதியில் 42 ஏக்கர் பரப்பளவில், 13 வகையான பலன் தரும் 10ஆயிரம் மரக் கன்றுகளை நட்டு பராமரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இன்று செப்டம்பர் ஐந்து ஆசிரியர் தினத்தையொட்டி எர்ரபையனஹள்ளி ஊராட்சியில் பணி தொடங்கிய 100-வது நாளில் ஆயிரம் மரக் கன்றுகள் நடும் பணியை தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் மரக்கன்று நட்டு தொடங்கி வைத்தார்.

இதனை தொடர்ந்து நடைபெற்ற விழாவில் சிறப்பாக பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு வாழ்த்து தெரிவித்து, பாராட்டி பொன்னாடை அணிவித்து கௌரவித்தார். மேலும் தருமபுரி மாவட்டத்தில் சுற்றுலா தளம் என்றால், அது ஒகேனக்கல் மட்டுமே, வேறு எதுவும் சுற்றுலாத் தலங்கள் இல்லை.

எடப்பாடி விரைவில் கைது?; ஆதாரம் சிக்கியதாக தகவல்!

தற்பொழுது இந்த எர்ரபயனஹள்ளி பகுதியில் 42 ஏக்கர் பரப்பளவில் பழத் தோட்டம் அமைக்கப்பட்டு வருகிறது. இதனை நன்றாக பராமரித்து ஒரு சுற்றுலாத் தலமாக உருவாக்க எல்லோரும் முயற்சிக்க வேண்டுமென எஸ்பி சி.கலைச்செல்வன் தெரிவித்தார். இந்த விழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அடுத்த செய்தி