ஆப்நகரம்

ஓய்வூதியர்கள் ஏமாற்றம்? தருமபுரியில் ஆர்ப்பாட்டத்தை கையிலெடுத்த ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம்!

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம் சார்பில் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Curated byDhivya Thangaraj | Samayam Tamil 14 Jun 2022, 5:59 pm

ஹைலைட்ஸ்:

  • ஓய்வுபெற்ற அலுவலர் சங்கம் ஆர்ப்பாட்டம்
  • தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே முழக்கம்
  • அகவிலைப்படியை வழங்கிடு என வலியுறுத்தல்

ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil dharmapuri
ஓய்வுபெற்ற அலுவலர் சங்கம் தருமபுரி மாவட்ட மையம் சார்பாக இன்று காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டம் ஓய்வுபெற்ற அலுவலர் சங்க தலைவர் பசுபதி தலைமையேற்று நடத்தி வைத்தார்.
அதன் பின்பு இந்த ஆர்ப்பாட்டத்தில் வழங்கிடு வழங்கிடு அகவிலைப்படியை வழங்கிடு, வழங்கிடு வழங்கிடு மருத்துவ செலவை முழுதும் வழங்கிடு, ஏமாற்றாதே ஏமாற்றாதே ஓய்வூதியர்கள் ஏமாற்றாதே எனற பல்வேறு வகையான கோரிக்கைகளை முழக்கமாக வெளியிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க செயலாளர் வடிவேல் முன்னிலை வகித்தார். பொருளாளர் முருகேசன் வரவேற்புரையாற்றினார். பரமசிவம் ஓய்வு பெற்ற ஆசிரியர் , துரை ,சின்னராசு ,ரகிம் சிங்காரம் ,காளியப்பன் ,ஜெயசீலன், முனுசாமி ஆகியோர் வாழ்த்துரை ஆற்றினர். துணைத் தலைவர் பீமான் கோரிக்கை உரையாற்றினார்.

பாப்பாரப்பட்டி கோவில் தேர் விபத்து; அமைச்சர் பன்னீர் செல்வம் நேரில் ஆய்வு!

இறுதியாக சக்திவேல் அனைவருக்கும் நன்றி உரை தெரிவித்தார். இந்த கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டத்தில் வீரமணி பச்சியப்பன் பெரியசாமி துரை மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.
எழுத்தாளர் பற்றி
Dhivya Thangaraj

அடுத்த செய்தி