தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டி அருகே உள்ள புதுப்பட்டியை சேர்ந்தவர் மணிராஜா, இவரது மனைவி வினோதினி (26). இவர்களுக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிறது.குழந்தை இல்லாத நிலையில், கணவன் - மனைவி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த மார்ச் மாதம் ஏற்பட்ட பிரச்சனை போது வினோதினி கணவரிடம் கோபித்துக்கொண்டு அரூர் எல்லப்புடையாம் பட்டியில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். பின்னர், வீட்டிற்கு வருமாறு மணிராஜா விடுத்த அழைப்பை வினோதினி நிராகரித்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில், மணிராஜா தனது மனைவியை விவாகரத்து செய்ய திட்டமிட்டு வருக்கு வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதனால், மனமுடைந்து காணப்பட்ட வினோதினி நேற்று எலியை கொல்ல பயன்படுத்தும் பேஸ்டை சாப்பிட்டு மயங்கி விழுந்துள்ளார்.
அவரை மீட்ட குடும்பத்தினர் அரூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனாலும், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சம்பவம் குறித்து அரூர் காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில், மணிராஜா தனது மனைவியை விவாகரத்து செய்ய திட்டமிட்டு வருக்கு வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதனால், மனமுடைந்து காணப்பட்ட வினோதினி நேற்று எலியை கொல்ல பயன்படுத்தும் பேஸ்டை சாப்பிட்டு மயங்கி விழுந்துள்ளார்.
அவரை மீட்ட குடும்பத்தினர் அரூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனாலும், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சம்பவம் குறித்து அரூர் காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.