ஆப்நகரம்

2 ஊசி போட்டவர்களுக்காக ஓபன் ஆன ஒகேனக்கல்: குவிந்து கிடக்கும் மக்கள்!

தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல் சுற்றுலா தளத்திற்கு ஓர் ஆண்டுக்கு பிறகு சுற்றுலா பயணிகள் வருவதால், மொத்த இடமும் களைக்கட்டி உள்ளது.

Samayam Tamil 27 Sep 2021, 3:39 pm
தருமபுரி மாவட்டம் பெண்ணாகரம் அடுத்து ஒகேனக்கல் சுற்றுலா தளம் மிகவும் சுற்றுலாப் பயணிகள் மத்தியில் பிரபலமானது. வெளிநாடு வெளி மாநிலகங்களிருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து செல்வது வழக்கம்.
Samayam Tamil 2 ஊசி போட்டவர்களுக்காக ஓபன் ஆன ஒகேனக்கல்: குவிந்து கிடக்கும் மக்கள்!


இந்த சூழலில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக ஒகேனக்கல் சுற்றுலா தலத்திற்கு சுற்றுலா பயணிகள் வருகைக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்தது.

இந்நிலையில் உலக சுற்றுலா தினம் தினத்தை முன்னிட்டு ஒகேனக்கல்லில் உள்ள தொழிவாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி சுற்றுலாப் பயணிகளுக்கு இன்று முதல் அனுமதி வழங்கியுள்ளார்.

உலக தரத்துக்கு மாறுகிறது ஒகேனக்கல்; எம்.பி தகவல்...பரிசல் ஓட்டிகள் மகிழ்ச்சி!
இதையடுட்த்து ஒகேனக்கலுக்கு கொரோனா கட்டுப்பாடுகளுடன் சுற்றுலாப் பயணிகள் ஒகேனக்கல் சுற்றுலா தளத்திற்கு நுழையலாம் என விதிமுறைகள் வகுக்கப்பட்டிருந்தது.


அதன்படி தடுப்பூசி 2 முறை செலுத்திக் கொண்டவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். இந்த சான்று சரிபார்க்கப்பட்ட பின் ஒகேனக்கலுக்குள் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்

அடுத்த செய்தி