ஆப்நகரம்

தர்மபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் வட்டாட்சியர் அலுவலகத்தில் திடீர் ஆய்வு; தமிழ்நாடு அரசு கேபிள் இசேவை மையத்தின் செயல்பாடு குறித்து கேட்டறிந்தார்!

தர்மபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் சாந்தி வட்டாட்சியர் அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்

Curated byDhivya Thangaraj | Samayam Tamil 21 Apr 2023, 12:50 pm
வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆய்வு
Samayam Tamil மாவட்ட ஆட்சித்தலைவர் சாந்தி வட்டாச்சியர் அலுவலகத்தில் ஆய்வு
மாவட்ட ஆட்சித்தலைவர் சாந்தி வட்டாச்சியர் அலுவலகத்தில் ஆய்வு

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் சாந்தி அவர்கள் திடீரென ஆய்வு மேற்கொண்டார். மேலும் அப்போது நல்லம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் இருக்கை வாரியாக நிலுவை மனுக்கள் குறித்தும், நீண்ட நாளாக நிலுவையில் உள்ள நில அளவை மனுக்கள் மக்கள் குறைதீர்க்கும் மனுக்கள் மற்றும் பட்டா மாறுதல்கள் குறித்தும் பெறப்பட்ட மனுக்கள் மீதான தொடர் நடவடிக்கையை குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

கோடைக்கு முன்னரே வறண்ட ஒகேனக்கல் காவிரி ஆறு... இரு மாவட்டங்களுக்கு குடி தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் சூழல்

கோரிக்கை மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை
அதனைத் தொடர்ந்து பட்டா மாறுதல் மற்றும் முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றப்படுவது குறித்து ஆய்வு செய்தார். மேலும் நிலுவையில் இருக்கும் விண்ணப்பங்களின் விவரங்கள் மற்றும் பொது மக்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கை ஆகியவை குறித்து அங்குள்ள அலுவலரிடம் கேட்டறிந்தார்.

அதனை அடுத்து பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் கோரிக்கை மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்படுவதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வட்டாச்சியர் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் இசேவை மையம்
அதனை தொடர்ந்து நல்லம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் இசேவை மையம் செயல்பட்டு வருகின்றது. அங்கு மாவட்ட ஆட்சித்தலைவர் சாந்தி ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் இசேவை மையத்தில் விண்ணப்பிக்க வந்திருந்த விண்ணப்பதாரர்களிடம் கோரிக்கைகளையும் இசேவை மையத்தின் செயல்பாடுகள் குறித்தும் கேட்டறிந்தார்.
எழுத்தாளர் பற்றி
Dhivya Thangaraj

அடுத்த செய்தி