ஆப்நகரம்

தீபாவளி காரணமாக தருமபுரியை பிக் பிஸ் ஸ்டைலில் பார்க்க தொடங்கிய போலீஸ்!

சேலம் சரக் டிஐஜி மகேஸ்வரி தர்மபுரி மாவட்டத்தில் குற்றச் சம்பவங்களை தடுக்கும் விதமாக போலீஸ் கட்டுப்பாட்டு அறையை திறந்து வைத்து உள்ளார்.

Samayam Tamil 28 Oct 2021, 10:49 pm
தர்மபுரி நகர்ப்பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கும் விதமாக காவல்துறை மற்றும் பொதுமக்கள் பங்களிப்புடன் 32 இடங்களில் 105 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம் சேலம் சரக டிஐஜி மகேஸ்வரி திறந்து வைத்தார்.
Samayam Tamil தீபாவளி காரணமாக தருமபுரியை பிக் பிஸ் ஸ்டைலில் பார்க்க தொடங்கிய போலீஸ்!


தர்மபுரி நகர்ப்பகுதியில் பண்டிகை காலங்களில் அதிக கூட்ட நெரிசலில் காரணமாக சிறுசிறு விபத்துகள் மற்றும் திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.

இதனை கண்காணித்து தடுக்கும் விதமாக தர்மபுரி நகர் பகுதியில் நான்கு ரோட்டில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஏராளமான சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

காவல், கனிமவளத்துறை உதவியுடன் சட்டவிரோதமாக இயங்கும் குவாரி... ஆட்சியர் நடவடிக்கை பாயுமா?
அதாவது, அரசு மருத்துவக்கல்லூாி மருத்துவமனை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பேருந்து நிலையம் கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் தர்மபுரி மாவட்ட காவல்துறை மற்றும் பொதுமக்கள் பங்களிப்புடன் 32 இடங்களில் 105 கேமராக்கள் கடந்த 3 மாதங்களாக பொருத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில் தருமபுரி நகர காவல் நிலையத்தில் தர்மபுரி நகரில் கண்காணிக்கும் விதமாக வைக்கப்பட்டுள்ள கேமரா கட்டுப்பாட்டு அறையில் சேலம் சரக டிஐஜி மகேஸ்வரி ரிப்பன் வெட்டி இன்று திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் காவல் துணை கண்காணிப்பாளர் அண்ணாதுரை நகர காவல் ஆய்வாளர் சரவணன் உள்ளிட்ட காவலர்கள் உடன் இருந்தனர்.

அடுத்த செய்தி