ஆப்நகரம்

ரகசிய மீட்டிங் போட்ட இபிஎஸ்; கே பி அன்பழகனுக்கு சிக்கலா? ஆறுதலா?

லஞ்ச ஒழிப்பு விசாரணையில் சிக்கிய முன்னாள் அமைச்சர் கே பி அன்பழகன் வீட்டிற்கு எதிர்கட்சி தலைவர் வருகை புரிந்தார்.

Samayam Tamil 23 Jan 2022, 1:19 pm

ஹைலைட்ஸ்:

  • கே பி அன்பழகன் வீட்டில் ரெய்டு எதிரொலி.
  • கெரகோட ஹள்ளியில் உள்ள கே பி அன்பழகன் வீட்டிற்கு இ பி எஸ் வருகை.
  • அதிமுக மாஜி அமைச்சர்களும் இந்த சந்திப்பில் பங்கேற்பு.
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
காரிமங்கலம் அடுத்த கெரகோட ஹள்ளியில் உள்ள முன்னாள் அமைச்சர் கே பி அன்பழகன் வீட்டிற்கு எதிர்கட்சி தலைவர் பழனிசாமி வருகை புரிந்தார்.
திமுக ஆட்சியேற்ற பின் ஊழல் செய்த அதிமுக பிரமுகர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக மாதம் ஒரு முறை அதிமுக பிரமுகர்கள் யாராவது ஒருவர் வீட்டிற்கு ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது. ரெய்டு கூண்டில் தற்போது வரை கே சி வீரமணி, வேலுமணி, எம் ஆர் விஜய பாஸ்கர், தங்கமணி, சி விஜய பாஸ்கர் சிக்கியுள்ளனர். இதனை தொடர்ந்து தற்போது கே பி அன்பழகன் வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டது. காரிமங்கலம் அடுத்துள்ள கெரகோடஹள்ளியில் உள்ள முன்னாள் அமைச்சர் அன்பழகன் வீடு உள்ளிட்ட, 58 இடங்களில் கடந்த 20 ம் தேதி லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுப்பட்டனர். இந்த ரெய்டு சம்பவம் அதிமுக பிரமுகர்கள், தொண்டர்கள் மத்தியில் சலப்பையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது.

மிகவும் பரபரப்பாய் காணப்பட்ட இந்த சூழலில் கே பி அன்பழகன் வீட்டிலிருந்து பணம், நகை ஆகியவற்றை லஞ்ச ஒழிப்புத்துறையினர் பறிமுதல் செய்தனர். இந்த சோதனையில் போது முன்னாள் அமைச்சர்கள் வீரமணி, தங்கமணி, உதயகுமார், செங்கோட்டையன், கருப்பண்ணன் உள்ளிட்ட அமைச்சர்கள் வந்து முன்னாள் அமைச்சர் அன்பழகனை சந்தித்து பேசிவிட்டு சென்றனர். ஆனால் எதிர்கட்சி தலைவர் பழனிசாமி வரவில்லை என தர்மபுரி மாவட்ட அ.தி.மு.க, தொண்டர்கள் மத்தியில் அதிருப்தி இருந்தது.


இந்த நிலையில் கெரகோடஹள்ளியில் உள்ள அன்பழகன் வீட்டிற்கு எடப்பாடி பழனிசாமி வருகை புரிந்தார். சிறிது நேரம் தேநீர் குடித்த பின் ரெய்டு குறித்த சம்பவம் குறித்து கருத்து கேட்டதாக தெரிகிறது. பின்னர் அன்பழகன் மற்றும் பழனிசாமி ஆகிய இருவரும் தனி அறைக்குள் சென்று 20 நிமிடங்களுக்கு மேல் தனியாக ஆலோசனை நடைபெற்றதாக தெரியவருகிறது. தனி அறையில் நடைபெற்ற ஆலோசனை குறித்து தகவல் இல்லை என்றாலும் இந்த சந்திப்பின் போது
மாஜி அமைச்சர்கள் வீரமணி, முல்லைவேந்தன் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் கோவிந்தசாமி,சம்பத்குமார் கட்சி நிர்வாகிகள் வெளியே காத்திருந்தனர்.

சுமார் 20 நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்புக்கு பின் தனி அறையிலிருந்து வெளியே வந்த எடப்பாடி பழனிசாமி காரில் ஏறி சென்றார். இ பி எஸ் - கே பி அன்பழகன் சந்திப்புக்கு பின் அதிமுக தொண்டர்கள் சற்று ஆறுதல் அடைந்திருக்கின்றனர்.

அடுத்த செய்தி