ஆப்நகரம்

மாஜி அமைச்சர் பழனியப்பனுக்கு மா.செ., பொறுப்பு - திமுக தலைமை அறிவிப்பு!

முன்னாள் அமைச்சர் பழனியப்பன் தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளராகவும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தடங்கம் சுப்பிரமணி கிழக்கு மாவட்ட செயலாளராகவும் திமுக தலைமை அறிவித்துள்ளது

Samayam Tamil 30 Sep 2022, 1:33 pm
திமுகவில் 15-ஆவது பொதுத்தேர்தல் நடந்து வருகிறது. பேரூர், ஒன்றியம், நகரம், பகுதி, மாநகரம், மாவட்ட பொறுப்புகளுக்கு உட்கட்சி தேர்தல் நடத்தப்பட்டு பொறுப்பாளர்கள் விபரங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
Samayam Tamil p palaniappan
முன்னாள் அமைச்சர் பழனியப்பன்


திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் 72 மாவட்ட செயலாளர்களை தேர்வு செய்ய உட்கட்சி தேர்தல் நடந்தது. அமைச்சருக்கு இணையான அதிகாரம் கொண்ட இந்த பொறுப்புகளுக்கு நூற்றுக்கும் மேற்பட்டோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

இந்த நிலையில் பேரூர், ஒன்றிய, நகர, பகுதி, மாநகர மாவட்டங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட செயலாளர்கள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர, மாவட்ட நிர்வாகிகளின் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ளார்.
தருமபுரி மாவட்ட ஊர்க்காவல் படைக்கு ஆட்தேர்வு முகாம்!

அதில், 64 மாவட்ட செயலாளர்கள் போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தருமபுரி கிழக்கு உட்பட 7 மாவட்ட செயலாளர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.தென்காசி வடக்கு மாவட்ட தேர்தல் முடிவு பின்னர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டத்தை பொறுத்தவரையில் பாப்பிரெட்டிபட்டி, அரூர், பாலக்கோடு ஆகிய சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளராக முன்னாள் அமைச்சர் பழனியப்பன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அந்த பொறுப்பில் இருந்த இன்பசேகரன் விடுவிக்கப்பட்டுள்ளார். தருமபுரி, பென்னாகரம் தொகுதிகளை உள்ளடக்கிய தருமபுரி கிழக்கு மாவட்ட செயலாளராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தடங்கம் சுப்பிரமணி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே மாவட்ட செயலாளர் பொறுப்பு வகித்து வருகிறார்.

அடுத்த செய்தி