ஆப்நகரம்

ஒரு கிலோ தக்காளி 2 ரூபாய்; அதையும் வாங்க ஆள் இல்ல..!

தக்காளிக்கு நல்ல விலை கிடைக்கிறது என்கிற ஆர்வத்தில் விவசாயிகள் அதிகளவில் தக்காளி சாகுபடியில் ஈடுபட்ட நிலையில் கொரோனா கட்டுப்பாடுகளால் விற்பனை குறைந்ததால் தோட்டங்களிலேயே வீணாகி வரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், ஒரு கிலோ தக்காளியை 2 ரூபாய்க்கு வாங்க கூட ஆள் இல்லாமல் இழப்பை சந்தித்து வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Samayam Tamil 8 May 2021, 5:37 pm
தருமபுரி மாவட்டத்தில் பெல்ரம்பட்டி, காடு செட்டிபட்டி, நல்லம்பட்டி, வெள்ளிச்சந்தை, சோமன் அல்லி மற்றும் தக்காளிக்கு என்றே பெயர் பெற்ற பாலக்கோடு தக்காளி மார்க்கெட்டில் நாளொன்றிற்கு ஏறக்குறைய சுமார் 100 டன் அளவிற்கு தக்காளி வர்த்தகம் நடைபெற்று வந்தது.
Samayam Tamil செடியில் அழுகி வீணாகும் தக்காளி
செடியில் அழுகி வீணாகும் தக்காளி


இந்நிலையில தற்போது நிலவி வரும் விலை வீழ்ச்சியால் தக்காளியை வாங்க வியாபாரிகள் பெரிதும் ஆர்வம் காட்டவில்லை. இதனால் சுமார் 5 லிருந்து 10 டன் அளவிற்கு கூட வியாபாரம் நடைபெறாததால் மார்க்கெட் பகுதியே விவசாயிகள் வியாபாரிகளின் வருகையின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

இதன் காரணமாக கடும் சிரமங்களை கடந்து சாகுபடி செய்த தக்காளிக்கு உரிய விலை கிடைக்காமல் இழப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் இழப்பை சந்தித்துள்ள தக்காளி விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஊரடங்கு போட அரசு தயங்காது; ஆளுநர் தமிழிசை தகவல்!

மேலும் தக்காளி ஜாஸ் தயாரிக்கும் தொழிற்சாலையினை பாலக்கோடு பகுதியில் கொண்டு வர புதிதாக பெறுப்பேற்றுள்ள தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அடுத்த செய்தி