தருமபுரி நகரில் உள்ள சாலை விநாயகர் கோயில் பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி. இவர் வனத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்று பென்சன் வாங்கி வந்த நிலையில், கடந்த 2007 ஆண்டு இறந்துவிட்டார். பின்னர் பென்ஷன் பணத்தை அவரது மனைவி சென்னாம்மாள் வாங்கி வந்தார். கடந்த 2019-ம் ஆண்டு சென்னம்மாள் உயிரிழந்துவிட்டார். இதனால் சென்னம்மாள் வாங்கி வந்த பென்ஷனை அவரது மகள் சாந்தியின் பெயருக்கு மாற்றும்படி முருகன் என்பவர் ஆட்சியர் அலுவலகம் மற்றும் தருமபுரி வன கோட்ட அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். மேலும், 3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள ஓய்வு ஊதியத் தொகையை வழங்கவும் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த மனு, தருமபுரி வன கோட்ட அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றும் பழனிசாமி என்பவரிடம் வந்துள்ளது. அப்போது முருகனை அழைத்து விசாரணை செய்த சின்னசாமி, பென்ஷனை பெயர் மாற்றம் செய்ய 34 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.
5 ரூபாய் காயினை விழுங்கிய 4 வயது சிறுவன்… நடந்தது என்ன?
லஞ்சம் கொடுக்க விரும்பாத முருகன், தருமபுரி லஞ்ச ஒழிப்பு போலீசாரை அனுகியுள்ளார். அவர்களது வழிகாட்டுதலின் படி முருகன், வன அலுவலகத்திற்கு சென்று பழனிசாமியிடம் லஞ்சப்பணம் கொடுக்கும் போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்தனர். பழனிசாமியிடம் இருந்து ரூ.34,410-ஐ கைது செய்த போலீசார் 4 மணிநேர விசாரணைக்கு பிறகு அழைத்துச்சென்றனர்.
இந்த மனு, தருமபுரி வன கோட்ட அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றும் பழனிசாமி என்பவரிடம் வந்துள்ளது. அப்போது முருகனை அழைத்து விசாரணை செய்த சின்னசாமி, பென்ஷனை பெயர் மாற்றம் செய்ய 34 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.
5 ரூபாய் காயினை விழுங்கிய 4 வயது சிறுவன்… நடந்தது என்ன?
லஞ்சம் கொடுக்க விரும்பாத முருகன், தருமபுரி லஞ்ச ஒழிப்பு போலீசாரை அனுகியுள்ளார். அவர்களது வழிகாட்டுதலின் படி முருகன், வன அலுவலகத்திற்கு சென்று பழனிசாமியிடம் லஞ்சப்பணம் கொடுக்கும் போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்தனர். பழனிசாமியிடம் இருந்து ரூ.34,410-ஐ கைது செய்த போலீசார் 4 மணிநேர விசாரணைக்கு பிறகு அழைத்துச்சென்றனர்.