ஆப்நகரம்

அரசு அதிகாரிகள் ஒத்துழைப்பு வழங்கவில்லை-தருமபுரி திமுக எம்பி

அரசு அதிகாரிகள் ஒத்தழைப்பு இல்லாததால் மக்கள் பணிகள் செய்ய முடியாமல் பாதிக்கவதாக திமுக எம்பி செந்தில்குமார் குற்றம் சாட்டியுள்ளார். பயணிகளின் வசதிக்காக அமைக்கப்பட்ட மின் தூக்கிகளை ரிப்பன் வெட்டி தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் செந்தில்குமார் தொடங்கி வைத்தார்.

Edited byசு. கணபதி சுப்பிரமணியன் | Samayam Tamil 16 May 2023, 12:24 pm

ஹைலைட்ஸ்:

  • அரசு அதிகாரிகள் ஒத்துழைப்பு வழங்கவில்லை
  • திமுக எம்பி குற்றச்சாட்டு
  • பயணிகளின் வசதிக்காக அமைக்கப்பட்ட மின் தூக்கிகள்
  • ரிப்பன் வெட்டி தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் செந்தில்குமார் தொடங்கி வைத்தார்
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil senthilkumar
Senthilkumar
தருமபுரி ரயில் நிலையத்தில் முதல் நடைமேடையில் அதிக அளவில் ரயில்கள் நின்று செல்லாததால் பயணிகள் இரண்டு மற்றும் மூன்றாவது நடைமேடைக்கு சென்று ரயில்கள் ஏறவேண்டிய சூழ்நிலை இருந்தது. இதனால் முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.
விழுப்புரம் கிளியனூரில் காவு வாங்கிய கள்ளச்சாரயம்-கொந்தளித்த உறவினர்கள்
மின் தூக்கி
எனவே பயணிகள் சென்று வர எதுவாக இருக்கும் வகையில் மின் தூக்கிகளை அமைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. ரயில்வே பயணிகள் சங்கம் மற்றும் பயணிகள் பொதுமக்கள் பல்வேறு முறை கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் செந்தில்குமார் நாடாளுமன்றத்திலும் ரயில்வே துறை மத்திய அமைச்சரிடம் கோரிக்கையை வைத்தார்.
ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்
தற்போது அந்த பணிகள் முடிவடைந்து அந்த கோரிக்கையை ஏற்று பயணிகளின் வசதிக்காக அமைக்கப்பட்ட மின் தூக்கிகளை ரிப்பன் வெட்டி தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் செந்தில்குமார் தொடங்கி வைத்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-

நாடாளுமன்ற தேர்தலுக்கு ஒரு முன்னுதாரணம்
கர்நாடக சட்டபேரவை தேர்தல் 2024 பாராளுமன்ற தேர்தலுக்கு ஒரு முன்னெடுப்பாக இருக்கும். தமிழக முதல்வர் ஸ்டாலின் அனைத்து மாநில தலைவர்களுடன் தொடர்பில் உள்ளார். டுவிட்டர் கணக்கில் அண்ணாமலை தவறான செய்தி வெளியிட்டு வருகிறார். 217-வது பூத்தில் ஒரு ஒட்டு வாங்கியவர் என பதிவு செய்ததற்கு பிஜேபி ஐடி விங்கினர் மறுப்பு தெரிவித்து மூன்று பூத்களில் தலா ஒரு ஓட்டு வாங்கியுள்ளார் என தெரிவித்துள்ளனர்.
பள்ளியின் சுற்றுற்சுவர் இடிப்பு-திருவண்ணாமலையில் தொடர்ந்து அரங்கேறி வரும் பரபரப்பு சம்பவங்கள்
அதிகாரிகள் ஒத்துழைப்பு இல்லை
பிஜேபி ஐடிவிங்கினர் மேலும் மேலும் அண்ணாமலையை அவமானப்படுத்தி வருகின்றனர். கர்நாடக மாநில தேர்தலில் பிஜேபிக்கு தலைமை தாங்கி எங்களை வெற்றி பெற செய்துள்ளார். மாவட்டத்தில் ஆட்சியர் ஒத்துழைப்பு அளித்தாலும் அதிகாரிகள் ஒத்துழைப்பு அளிப்பதில்லை. அதனால் பல மக்கள் பணிகள் செய்ய முடியாமல் பாதிப்படைகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
எழுத்தாளர் பற்றி
சு. கணபதி சுப்பிரமணியன்
நான் கணபதி சுப்பிரமணியன். ஊடகத்துறையில் 5 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறேன். தேசிய, சர்வதேச, சினிமா செய்திகள் எழுதிய அனுபவம் உள்ளது. இப்போது சமயம் தமிழில் மாவட்ட செய்திகள் பிரிவில் பணிபுரிந்து வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி