ஆப்நகரம்

பள்ளி மாணவியிடம் சில்மிஷம்... போக்சோவில் உள்ளே போகும் ஆசிரியர்!

மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த அரசுப் பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

Samayam Tamil 22 Apr 2021, 4:45 pm

ஹைலைட்ஸ்:

  • மாணவிக்கு பாலியல் தொல்லை.
  • மாணவியின் தாய் போலீசில் புகார்.
  • அரசுப் பள்ளி ஆசிரியர் கைது.
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil அரசுப் பள்ளி ஆசிரியர் கைது - தருமபுரி
மாணவிக்கு பாலியல் தொல்லை -அரசுப் பள்ளி ஆசிரியர் கைது
தரூமபுரி மாவட்டம், இண்டூர் அரூகே உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் கோவிந்தன். இவர் அந்தப் பள்ளியில் பயின்றுவரும் 14 வயது மாணவிக்கு பாலியல் தொல்லைகள் கொடுத்ததாக தெரிகிறது.
இதுகுறித்து மாணவி அவரது பெற்றோரிடம் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். அதனை கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் தாய், சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது பென்னாகரம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரைத் தொடர்ந்து அரசு பள்ளி ஆசிரியர் கோவிந்தனை போக்சோ சட்டத்தின்கீழ் போலீசார் கைது செய்துள்ளனர்.

அடுத்த செய்தி