ஆப்நகரம்

தருமபுரியில் வெடிக்கும் தன்மையற்ற 'கேஸ் சிலிண்டர்' அறிமுகம்.. இல்லத்தரசிகள் மகிழ்ச்சி

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்(IOC) நிறுவனத்தால் பாதுகாப்பு அம்சங்களுடன் நவீன முறையில் வடிவமைக்கப்பட்டு புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 10 கிலோ காம்போசிட் எரிவாயு உருளையின் முதல் விற்பனையினை தருமபுரி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் திருமதி.சாந்தி 30.09.2022 அன்று தொடங்கி வைத்தார்.

Samayam Tamil 6 Oct 2022, 2:05 pm
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்(IOC) நிறுவனத்தால் பாதுகாப்பு அம்சங்களுடன் நவீன முறையில் வடிவமைக்கப்பட்டு புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 10 கிலோ காம்போசிட் எரிவாயு உருளையின் முதல் விற்பனையினை தருமபுரி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் திருமதி.சாந்தி 30.09.2022 அன்று தொடங்கி வைத்தார்.
Samayam Tamil Indane composite cylinder


இதுகுறித்து ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
"இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்(IOC)நிறுவனத்தால் பாதுகாப்பு அம்சங்களுடன் நவீன முறையில் வடிவமைக்கப்பட்டு, புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட 10 கிலோ காம்போசிட் எரிவாயு உருளையின் (gas cylinder) விற்பனை தருமபுரி மாவட்டத்தில் ராஜலட்சுமி இண்டேன் கேஸ் ஏஜென்சிஸ் விநியோகஸ்தர் மூலம்
மேற்கொள்ளப்படுகின்றது.

இதனை முன்னிட்டு 10 கிலோ காம்போசிட் எரிவாயு(Indane composite cylinder) உருளையின் முதல் விற்பனை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. காம்போசிட் எரிவாயு உருளை தோற்றத்தில் அழகாகவும் எல்லோராலும் எளிதில் கையாள கூடியதாகவும் உள்ளது.

இந்த எரிவாயு உருளை வெடிக்கும் தன்மை அற்றது, (BLAST PROOF)பைபர் மெட்டீரியலால் உருவாக்கப்பட்டுள்ளது. நிரப்பப்பட்ட எரிவாயு உருளையின் அளவு மற்றும் உபயோகப்படுத்தப்பட்ட எரிவாயு
அளவு ஆகியவற்றை எளிதில் பார்க்கும் வசதி உடையது.

காம்போசிட் எரிவாயு உருளைக்கு (cylinder) முன்வைப்பு டெபாசிட் தொகை ரூ.3,350 மட்டும் ஆகும். 10 கிலோ காம்போசிட் எரிவாயு உருளையின் (Gas) இணைப்பு தேவைப்படும் பொதுமக்கள் தருமபுரியில் உள்ள ராஜலட்சுமி கேஸ் ஏஜென்சிஸ் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட 10 கிலோ காம்போசிட் எரிவாயு உருளையில் மேற்குறிப்பிட்டுள்ள சிறப்பு அம்சங்கள்
உள்ளன.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.சு.அனிதா, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் திரு.ஜெ.ஜெயக்குமார், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் ஓசூர் பகுதி விற்பனை அலுவலர் திரு.கிரண், தருமபுரி ராஜலட்சுமி இண்டேன் கேஸ் ஏஜென்சிஸ் விநியோகிஸ்தர்
திரு.ஞான வடிவேல் குமரன், மேலாளர் திரு.வில்சன் உட்பட பலர் கலந்து
கொண்டனர்" இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி