ஆப்நகரம்

“உயர் சாதி பொண்ணு கேட்குதோ... மூத்திரத்த குடி” சொன்னவர்கள் பயந்து தலைமறைவு: தருமபுரி காதல் திருமணம்!

சாதி ஆணவத்தோடு காதல் திருமணத்திற்காக சிறு நீர் கழித்து குடிக்க சொல்லி சித்திரவதை செய்ததாக 12 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Samayam Tamil 18 Sep 2021, 7:29 pm
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த செம்மனஹள்ளி காந்தி நகர் பகுதியில் இருளர் இனத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். வயது 19. டிப்ளமோ படித்துள்ளார்.
Samayam Tamil “உயர் சாதி பொண்ணு கேட்குதோ... மூத்திரத்த குடி” சொன்னவர்கள் பயந்து தலைமறைவு: தருமபுரி காதல் திருமணம்!


அதேபோல் பன்னிப்பட்டியில் வசித்து வரும் கொங்குச் சமூகத்தைச் சேர்ந்தவர் மோகனா. வயது 21. பி காம் முடித்துள்ளார். இவர்கள் இருவரும் காதலித்து திருணம் செய்துகொண்டனர்.

இதற்கு மோகனாவின் சமூகத்தை சேர்ந்தவர்கள் சாதி ஆணவத்தோடு மிருகங்களை போல் நடந்துக் கொண்டு எதிர்ப்பு தெரிவித்தாக கூறப்பட்டது.


அதேபோல் காதல் திருமணம் செய்து கொண்ட ரமேஷின் உறவினர்கள் 3 பேரை காரில் கடத்தி சென்று “இருளர் இனத்தை சேர்ந்த உங்களுக்கு உயர் சாதி பெண்ணு கேட்குதா” எனக் கூறி அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என சிறுநீர் கழித்து அதை குடிக்க சொல்லி துன்புறுத்தியுள்ளனர்.

இதுத் தொடர்பாக பாலக்கோடு டிஎஸ்பி, அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட சமூதாயத்தைச் சேர்ந்த மக்கள் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் மாரண்டஹள்ளி போலீசார் விசாரணை செய்தனர்.

அதில் இருளர் இனத்தை சேர்ந்த மூன்று பேர் மீது சிறுநீர் கழித்து குடிக்க சொல்லி துன்புறுத்தியதாக மோகனாவின் உறவினர் வீரமணி(45) ஆனந்தன்(40), முரளி(42) உள்ளிட்ட 12 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் தலைமறைவாக உள்ளனர். இதையடுத்து அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

அடுத்த செய்தி