ஆப்நகரம்

குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சாமி கோவில் உண்டியல் வசூல் ரூ.3 லட்சம்!

தர்மபுரியில் பிரசித்தி பெற்ற குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சாமி கோவிலில் ரூ.3½ லட்சம் உண்டியல் காணிக்கையாக கிடைக்கப் பெற்றது.

Curated bySrini Vasan | Samayam Tamil 28 Jun 2022, 12:52 pm
தருமபுரி குமாரசாமிப்பேட்டையில் உள்ள பிரசித்தி பெற்ற சிவசுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து பல்வேறு மக்கள் வருகை புரிந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.
Samayam Tamil உண்டியல் வசூல்


இந்த கோவில் வளாகத்தில் பக்தர்கள் காணிக்கை செலுத்த வசதியாக உண்டியல்கள் வைக்கப்பட்டு உள்ளன. இதில் பக்தர்கள் நேர்த்திக்கடனாக பணம், தங்கம், வெள்ளி பொருட்களை காணிக்கையாக செலுத்துகின்றனர். இந்த உண்டியல்கள் ஆண்டுக்கு ஒரு முறை திறக்கப்பட்டு இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில் எண்ணப்படும்.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

அதன்படி நேற்று குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சாமி கோவில் வளாகத்தில் உள்ள உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.

இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் உதயகுமார், கோவில் ஆய்வாளர் சங்கர், செயல் அலுவலர் சபரீஸ்வரி ஆகியோர் முன்னிலையில் சமூக ஆர்வலர்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் உண்டியலில் இருந்த பணத்தை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

உண்டியல் எண்ணும் பணி வீடியோ கேமரா மூலம் பதிவு செய்யப்பட்டது. அதன்படி கோவில் உண்டியல்களில் மொத்தம் ரூ.3 லட்சத்து 45 ஆயிரம் ருபாய் கிடைக்கப்பெற்றது. மேலும் 23 கிராம் தங்கம், 108 கிராம் வெள்ளி பொருட்கள் உண்டியலில் இருந்தது. இவை அனைத்தும் முறையாக கணக்கு வைக்கப்பட்டு கோவில் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது.
எழுத்தாளர் பற்றி
Srini Vasan

அடுத்த செய்தி