ஆப்நகரம்

உரிமை நிலைநாட்டிய பெண்கள்; இது எங்க நடந்ததுன்னு தெரியுமா?

தர்மபுரி மாவட்டத்தில் ஆண்களுக்கு பெண் எந்த விதத்திலும் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபித்துள்ளனர். அந்தவகையில் ஆண்களுடன் பெண்களுடன் வரிசையில் நின்று மது பாட்டில் வாங்கி சென்றனர்.

Samayam Tamil 15 Jun 2021, 2:08 pm
தர்மபுரி மாவட்டம் தொப்பூரில் அதிகாலையில் இருந்து நீண்ட வரிசையில் காத்திருந்து ஆண்களும், பெண்களும் தங்களுக்கு தேவையான மது பாட்டில்களை வாங்கி சென்றனர்.
Samayam Tamil ஆண்களுடன் பெண்களும் வரிசையில் நிற்கின்றனர்
ஆண்களுடன் பெண்களும் வரிசையில் நிற்கின்றனர்


தருமபுரி மாவட்டத்தில் நேற்று ஊரடங்கு தளர்வுகளால் மாவட்டத்திலுள்ள 68 அரசு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. மாவட்டத்தில் மற்ற பகுதிகளில் உள்ள மதுபான கடைகள் நேற்று வெறிச்சோடி காணப்பட்டன.

இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகமாக இருப்பதால் தளர்வுகள் அறிவிக்கப்படவில்லை. இதனால் மதுக்கடைகள் திறக்கப்படவில்லை. எனவே தருமபுரி சேலம் மாவட்ட எல்லையான தொப்பூர் மற்றும் பாளையம் புதூர் அரசு மதுபானக் கடையில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஓமலூர், தீவட்டிப்பட்டி மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மதுப்பிரியர்கள் அதிக அளவில் இருசக்கர வாகனங்கள், கார்கள், ஆட்டோக்கள் மூலம் மது வாங்க நேற்று குவிந்தனர்.

இதே போல் இன்றும் தர்மபுரி மாவட்டம் தொப்பூரில் உள்ள அரசு மதுபானக்கடையில் இன்று அதிகாலை முதலே மது வாங்க சேலம், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நீண்ட வரிசையில் மது வாங்க காத்திருந்தனர்.

‘ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்க முடியாது’; முதல்வர் ஸ்டாலின் கடிதத்துக்கு நாராயணசாமி நன்றி!

அதேப்போல் ஆண்களுடன், பெண்களும் வரிசையில் நின்று மது வாங்கி சென்றனர். வழக்கமாக 10 மணிக்கு திறக்க வேண்டிய டாஸ்மாக் கடை இன்று அதிகளவில் கூட்டம் காரணமாக 9.45 மணிக்கே திறக்கப்பட்டது. இதனால் மது பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

அடுத்த செய்தி