கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அருகே அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் சம்பத் என்பவரின் மகள் பிரியங்கா (31). இவருக்கும் சாமான் ஊரை சேர்ந்த மதன்குமார்(33)என்ற வாலிபருக்கும் கடந்த 16ஆம் தேதி திருமணம் முடிந்தது. திருமணம் முடிந்த பிறகும் பிரியங்காவுக்கு மதன் குமாருக்கும் இடையே சரியான புரிதல் இல்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அதனால் கணவரிடம் பிரியங்கா சரியாக பேசாமல் இருந்து வந்துள்ளார். இருப்பினும் பிரியங்கா நாளடைவில் சரியாகி விடுவார் என மதன்குமார் நினைத்து வந்தார். இந்த நிலையில் நேற்று தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே அனுமந்தபுரத்தில் உள்ள மதன் குமாரின் பெரியம்மா சென்னம்மாள் என்பவரது வீட்டிற்கு இருவரும் விருந்துக்காக சென்றுள்ளனர். அங்கும் அவர்கள் இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் பிரியங்கா மன உளைச்சலுக்கு ஆளாகினார்.
ஆகையால் நேற்று இரவு பெரியம்மா சென்னம்மாள் வீட்டின் மாடியில் இருந்து பிரியங்கா குதித்து தற்கொலை செய்து கொண்டார். அவர் குதித்ததில் கீழே இருந்த இரும்பு கம்பி மீது பிரியங்காவின் தலை வேகமாக மோதி பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் துடிதுடித்து கிடந்தார்.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி நள்ளிரவு 12.45 மணி அளவில் பரிதாபமாக உயிரிழந்தார்.
தற்போது இந்த சம்பவம் குறித்து புதுப்பெண் பிரியங்காவின் குடும்பத்தினர் காரிமங்கலம் காவல்துறையினரிடம் புகார் தெரிவித்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருமணமான 15 நாட்களில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ஆகையால் நேற்று இரவு பெரியம்மா சென்னம்மாள் வீட்டின் மாடியில் இருந்து பிரியங்கா குதித்து தற்கொலை செய்து கொண்டார். அவர் குதித்ததில் கீழே இருந்த இரும்பு கம்பி மீது பிரியங்காவின் தலை வேகமாக மோதி பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் துடிதுடித்து கிடந்தார்.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி நள்ளிரவு 12.45 மணி அளவில் பரிதாபமாக உயிரிழந்தார்.
தற்போது இந்த சம்பவம் குறித்து புதுப்பெண் பிரியங்காவின் குடும்பத்தினர் காரிமங்கலம் காவல்துறையினரிடம் புகார் தெரிவித்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருமணமான 15 நாட்களில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.