ஆப்நகரம்

விடுமுறையால் பள்ளியிலே கணினி திருடிய மாணவர்கள்: போலீசில் சிக்கியது எப்படி, தர்மபுரியில் அதிர்ச்சி!

பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் ஒரு லட்சம் மதிப்பிலான கணினி மற்றும் உபயோக பொருட்கள் திருடிய பள்ளி மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Samayam Tamil 6 Aug 2021, 9:44 am
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு அரசு 6 கணினிகள் மற்றும் உபபொருட்கள் வழங்கியது. இதன் மூலமாக மாணவர்கள் கணினி கல்வியை கற்று வந்தனர்.
Samayam Tamil விடுமுறையால் பள்ளியிலே கணினி திருடிய மாணவர்கள்: போலீசில் சிக்கியது எப்படி, தர்மபுரியில் அதிர்ச்சி!


இதற்கிடையே கொரோனா நோய்த்தொற்று நிலவி வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் விடுமுறையைப் பயன்படுத்தி கடந்த ஏப்ரல் 29ஆம் தேதி பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கணினி அறையில் வைக்கப்பட்டிருந்த 5 கணினிகள் மற்றும் அதைச்சார்ந்த உபயோகபொருட்கள் என சுமார் ஒரு லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருடப்பட்டது. இது குறித்து அறிந்த பள்ளி தலைமை ஆசிரியர் அப்துல் அஜிஸ் பாப்பிரெட்டிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதனடிப்படையில் பாப்பிரெட்டிப்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். விசாரணைக்குக் கடந்த ஜூலை 31ஆம் தேதி தமாணிக்கோம்பை பகுதியில் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அந்தப் பகுதியில் உள்ள நியாஸ் என்பவரின் மளிகைக் கடையில் திருட்டு சம்பவம் அரங்கேறியுள்ளது. அப்போது அங்கு காவல்துறையினர் இருப்பதைக் கண்ட மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
முக ஸ்டாலின் மருத்துவ திட்டத்தை அகதிகள் முகாம் வரை கொண்டுச் சென்ற ஆட்சியர் திவ்யதர்ஷினி!
அந்த சமயத்தில் தப்பி சென்ற திருடர் ஒருவரின் செல்போன் குறிப்பிட்ட கடையில் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த செல்போனை வைத்துக் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில் தமாணிக்கோம்பையைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் 3பேர் சேர்ந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் அவர்கள்தான் முன்னர் குறிப்பிட்ட பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆண்கள் பள்ளி கொள்ளை சம்பவத்திலும் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது.

மாணவர்கள் திருடிச்சென்ற கணினி மற்றும் உபயோக பொருட்கள் மாணவரின் வீட்டிலிருந்து பறிமுதல் செய்த காவல்துறையினர் 3 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சேலத்தில் உள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்த்தனர்.

அடுத்த செய்தி