ஆப்நகரம்

Anbumani Ramadoss:ரோட்டுக்கடையில் டீ; பேருந்தில் பிரசுரம்; மக்களோடு கேசுவல் டாக்- பலே ப்ளானில் பாமக தலைவர்!

அதிமுக, திமுக அடுத்த தேர்தலைப் பற்றி சிந்திப்பார்கள். பாமக மட்டும்தான் அடுத்த தலைமுறையை பற்றி சிந்திக்கிறது என அன்புமணி ராமதாஸ் தருமபுரியில் பேசியுள்ளார்.

Curated byDhivya Thangaraj | Samayam Tamil 20 Aug 2022, 1:01 pm

ஹைலைட்ஸ்:

  • தருமபுரி - காவிரி உபரிநீர் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி நடைபயணம்
  • சிப்காட் அமைத்து வேலைவாய்ப்பை ஏற்படுத்தவேண்டும்
  • காவேரி உபரிநீர் திட்டம் குறித்து அதிமுகவுக்கும் திமுகவிற்கும் எண்ணம் வரவில்லை
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil அன்புமணி ராமதாஸ்
அன்புமணி ராமதாஸ்
தருமபுரி - காவிரி உபரிநீர் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி நேற்று முதல் 3 நாட்களுக்கு பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் தருமபுரி மாவட்டத்தில் பிரச்சார நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். முதல் நாளான நேற்று ஒகேனக்கல்லில் உள்ள கூட்டு குடிநீர் சுத்திகரிப்பு மையத்தை ஆய்வு செய்து பார்வையிட்டு பிரச்சாரத்தை தொடங்கினார்.
அதனையடுத்து 2 வது நாளாக இன்று குரும்பட்டி, நடுப்பட்டி, ஒடசல்பட்டி, கடத்தூர் உள்ளிட்ட இடங்களில் பிரச்சார நடைபயணத்தை மேற்கொண்டபோது, அன்புமணிக்கு கட்சி தொண்டர்கள் பொது மக்கள் உற்சாக வரவேற்பளித்தனர். அப்போது டீ கடையில் டீ அருந்திவிட்டு, வணிகர்கள் மற்றும் பேருந்துகளில் சென்ற பொது மக்களிடம் துண்டு பிரசுரங்களை கொடுத்து தருமபுரி காவிரி உபரி நீர் திட்டத்தின் பயன்களை பற்றியும், தற்போது தமிழக அரசு இத்திட்டத்தை நடைமுறை படுத்த வேண்டும் என்பது குறித்தும் எடுத்துரைத்துத்தார்.

பிறகு மேடையில் பேசிய அன்புமணி ராமதாஸ்; தருமபுரி காவிரி உபநீர் திட்டம் மாவட்டத்திற்கு கொண்டு வந்தே ஆக வேண்டும். மாவட்டத்தில் உள்ள இளைஞர்கள், ஈரோடு, கோயம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு வாழ்வாதாரம் இல்லாமல் செல்கின்றனர். எனவே சிப்காட் அமைத்து வேலைவாய்ப்பை ஏற்படுத்த வேண்டும். காவேரி உபரிநீர் திட்டம் குறித்து அதிமுகவுக்கும் திமுகவிற்கும் எண்ணம் வரவில்லை. அதிமுக, திமுக அடுத்த தேர்தலைப் பற்றி சிந்திப்பார்கள். பாமக மட்டும்தான் அடுத்த தலைமுறையை பற்றி சிந்திக்கிறது.

ஃப்ளைட் ஓட்டுறதா நெனப்பு; அவிநாசி திருப்பூர் இடையே அதிவேகத்தில் பறக்கும் தனியார் பேருந்துகள்!

ஒகேனக்கல் உபரி நீர் திட்டம் பற்றி அதிமுகவிற்கும் திமுகவிற்கும் தெரியாது. இந்த திட்டத்தை முதன் முதலில் கொண்டு வரவேண்டும் என பாமக தான் வலியுறுத்தியது. இந்த திட்டம் குறித்து மூன்று நாட்கள் நடக்கும் நிகழ்வுகளை அரசுக்கு தெரியப்படுத்தி ஊடக வாயிலாக அழுத்தம் தர வேண்டும். காவிரி உபரி நீர் திட்டத்தை நிறைவேற்றும் வரை போராடிக் கொண்டுதான் இருப்பேன். இந்த திட்டத்தை வலியுறுத்தி அனைத்து கட்சி மற்றும் அனைத்து மதம், ஜாதி பாகுபாடுயின்றி ஆதரவளிக்க வேண்டும் என பேசினார்.
எழுத்தாளர் பற்றி
Dhivya Thangaraj

அடுத்த செய்தி