தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம், ஒட்டப்பட்டி-அவ்வை வழி பிரிவு சாலை பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதை தடுக்க பிரிவு சாலையில் ரவுண்டானா அமைக்க வேண்டும் என்று தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரனுக்கு அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இதை ஏற்று நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப் பொறியாளர் குலோதுங்கன் என்பவரை நேரில் அழைத்து சாலையை ஆய்வு செய்து பொதுமக்களின் நலன் கருதி இந்த கோரிக்கையை நிறைவேற்றி தர வேண்டுமென அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.
இதனை தொடர்ந்து, அரசு கலைக்கல்லூரி முன்பு நடைபெறும் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியை ஆய்வு செய்து பணியை தரமாகவும், வேகமாகவும் முடிக்க கேட்டுக்கொண்டார்.
பின்னர், ஏமக்குட்டியூர் செல்லும் பிரிவு சாலை பகுதிகளில் கழிவுநீர் செல்லும் பகுதியை ஆய்வு செய்தார். கழிவுநீர் தேங்காத வகையிலும், கழிவுநீர் எளிதாக செல்லும் வகையிலும் புதியதாக கழிவுநீர் கால்வாயை அமைக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு வலியுறுத்தினார்.
குடிநீர் தொட்டி மீது ஆன்லைன் கல்வி; மாணவிகள் வெகுதூரம் நடைபயணம்!
இந்த ஆய்வின்போது இளைஞர் சங்க மாநில செயலாளர் எம்.முருகசாமி, தொழிற்சங்க பொதுச்செயலாளர் சின்னசாமி, மாவட்ட துணை தலைவர் சுப்ரமணியம், ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய கவுன்சிலர் சோனியாவெங்கடேசன் மற்றும் நிர்வாரிகள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
இதனை தொடர்ந்து, அரசு கலைக்கல்லூரி முன்பு நடைபெறும் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியை ஆய்வு செய்து பணியை தரமாகவும், வேகமாகவும் முடிக்க கேட்டுக்கொண்டார்.
பின்னர், ஏமக்குட்டியூர் செல்லும் பிரிவு சாலை பகுதிகளில் கழிவுநீர் செல்லும் பகுதியை ஆய்வு செய்தார். கழிவுநீர் தேங்காத வகையிலும், கழிவுநீர் எளிதாக செல்லும் வகையிலும் புதியதாக கழிவுநீர் கால்வாயை அமைக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு வலியுறுத்தினார்.
குடிநீர் தொட்டி மீது ஆன்லைன் கல்வி; மாணவிகள் வெகுதூரம் நடைபயணம்!
இந்த ஆய்வின்போது இளைஞர் சங்க மாநில செயலாளர் எம்.முருகசாமி, தொழிற்சங்க பொதுச்செயலாளர் சின்னசாமி, மாவட்ட துணை தலைவர் சுப்ரமணியம், ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய கவுன்சிலர் சோனியாவெங்கடேசன் மற்றும் நிர்வாரிகள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.