ஆப்நகரம்

பள்ளி மாணவிக்கு என்னாச்சு?; பொறியில் சிக்கிய இளைஞன்!

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே 11ம் வகுப்பு மாணவி மாயமான வழக்கில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. மாணவியை கடத்தி சென்ற வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் காவல் துறையினர் கைது செய்தனர்.

Samayam Tamil 29 May 2021, 5:31 pm
தருமபுரி மாவட்டம் அரூர் அருகே அரசு பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வரும் மாணவி கடந்த 24ம் தேதி திடீரென மாயமானார். உடனே மாணவியின் பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். ஆனாலும் கிடைக்கவில்லை. இதையடுத்து அரூர் காவல் நிலையத்தில் மகளை காணவில்லை புகார் கொடுத்துள்ளனர்.
Samayam Tamil சிறுமிக்கு தொல்லை தரும் படம்
சிறுமிக்கு தொல்லை தரும் படம்


மேலும் தங்களது மகளை கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த எட்டிப்பட்டியை சேர்ந்த சிலம்பரசன் (23) என்ற வாலிபர் கடத்தி சென்று இருக்கலாம் என்று காவல் துறையிடம் மாணவியின் பெற்றோர் தெரிவித்து இருந்தனர்.

இதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்து, அரூர் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது சிலம்பரசன் மேட்டுப்பாளையம் பகுதியில் இருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. தொடர்ந்து மேட்டுப்பாளையம் சென்ற காவல் துறையினர் சிலம்பரசனுடன் காணாமல்போன மாணவி இருப்பதை கண்டறிந்தனர்.

உணவு வேண்டுமா? போன் அடிங்க; அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்!

இதனை தொடர்ந்து இருவரையும் அரூர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் சிலம்பரசன் மாணவியை கடத்தி சென்றது தெரிந்தது. இதையடுத்து 11ம் வகுப்பு மாணவியை கடத்தி சென்ற சிலம்பரசனை போக்சோ சட்டத்தின் கீழ் அரூர் காவல் துறையினர் கைது செய்தனர்.

அடுத்த செய்தி