ஆப்நகரம்

8-ம் வகுப்பு மாணவிக்கு காதல் வலை… தருமபுரி ஆசிரியர் செய்த கேவலமான செயல்!

தருமபுரி மாவட்டம், மொரப்பூர் அருகே உள்ள பிரபல தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு மாணவியை காதல் வலையில் வீழ்த்தி கடத்திச்சென்ற ஆசிரியர் முபாரக் என்பவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

Samayam Tamil 26 Apr 2022, 12:33 pm
தருமபுரி மாவட்டம், மொரப்பூர் அருகே உள்ள பிரபல தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு மாணவியை காதல் வலையில் வீழ்த்தி கடத்திச்சென்ற ஆசிரியர் முபாரக் என்பவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
Samayam Tamil Dharmapuri pocso case


தருமபுரி மாவட்டம், மொரப்பூர் அருகே பிரபல தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சிபிஎஸ்சி மற்றும் ஸ்டேட் போர்டு பாடத்திட்டத்தின் கீழ் சுமார் 1,500 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

இப்பள்ளியில், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் எடுத்த ஆசிரியர் முபாரக் என்பவர் பள்ளி மாணவி ஒருவருடன் செல்போனில் அதிக நேரம் பேசுவதை அறிந்த பள்ளி நிர்வாகம், சம்பந்தப்பட்ட மாணவியின் பெற்றோரை அழைத்து விபரத்தை கூறி எச்சரிக்கை செய்துள்ளனர். மேலும், ஆசிரியர் முபாரக் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து அவரை பணிநீக்கம் செய்து உத்தரவிட்டது.
சாம்சங் கேலக்ஸி M32 வெல்ல அட்டகாசமான வாய்ப்பு. இந்த படிவத்தை பூர்த்தி செய்து பல கவர்ச்சிகரமான பரிசுகளை வெல்லுங்கள்

இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை அன்று பள்ளி பேருந்தில் புறப்பட்ட மாணவி, முக்கியமான சான்றிதழை மறந்து வீட்டில் வைத்துவிட்டதாக கூறி பேருந்து ஓட்டுநரின் செல்போனில் இருந்து தந்தைக்கு போன் செய்வது போல் நடித்து ஆசிரியர் முபாரக்கிற்கு செல்போனில் பேசியதாக கூறப்படுகிறது.

பின்னர், பேருந்து ஓட்டுநரிடம் தந்தையுடன் பின்னால் வருவதாக கூறிவிட்டு பாதியில் இறங்கியுள்ளார். அந்த பள்ளி நிர்வாக உத்தரவின் படி மாணவர்களை பாதியில் இறக்கும் வழக்கம் இல்லை. இருப்பினும் மாணவி வற்புறுத்தி கேட்டுக்கொண்டதன் பேரில் வேறு வழியின்றி ஓட்டுநர் மொரப்பூர் பகுதியில் இறக்கி விட்டதாக தெரிகிறது.

இப்படி நாடகத்தை அரங்கேற்றிய அந்த மாணவி ஆசிரியர் முபாரக்கை வரவழைத்து அவருடன் சென்றுள்ளார். மாணவி வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மொரப்பூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் ஆசிரியரை வலைவீசி தேடிய நிலையில், நேற்று, சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணத்தில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது மடக்கி பிடித்த போலீசார் மாணவியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
அதிமுக நிர்வாகியின் ஆலைக்கு சீல்… அன்பழகனுக்கு வந்த புது சோதனை!

8-ம் வகுப்பு மாணவிக்கு காதல் வலை வீசி அவரை கடத்திச்சென்ற ஆசிரியர் முபாரக் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர். விசாரணையில் சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்தின் மீது எவ்வித தவறும் இல்லை என கூறப்படுகிறது.

அடுத்த செய்தி