ஆப்நகரம்

நூறு நாள் பணியின்போது பெண்ணை கடித்த பாம்பு!

நூறு நாள் வேலை திட்ட பணியின்போது பாம்பு கடித்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Samayam Tamil 16 Aug 2021, 8:27 pm

ஹைலைட்ஸ்:

  • நூறு நாள் வேலை திட்டத்தில் பணி.
  • அப்போது புதரில் ஒளிந்திருந்த பாம்பு பெண்ணை கடித்தது.
  • மருத்துவமனையில் அனமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி மரணம்.
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil பாம்பு கடித்து பலியான பெண்
தருமபுரி அருகே பாம்பு கடித்து பலியான பெண்
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்தபேவுஹள்ளி பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் நேற்று காலை அப்பகுதியை சேர்ந்த பெண்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பணி செய்து கொண்டிருந்தனர்.
அப்போது சீரியம்பட்டி கிராமத்தை சேர்ந்த முனிரத்தனம்,46. என்கிற பெண்ணை அங்கு புதரில் இருந்த பாம்பு கடித்துள்ளது. இதில் மயங்கி விழுந்த முனிரத்தினத்தை அருகே இருந்தவர்கள் மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

அங்கு அவர் சிகிச்சை பலனில்லாமல் அவர் உயிரிழந்தார். இதுகுறித்து மாரண்டஹள்ளி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி