ஆப்நகரம்

கலந்தாய்வில் குளறுபடிகள்?; கல்லூரி மாணவர்கள் தர்ணா!

தருமபுரி அரசு கலைக்கல்லூரியில் நடந்து வரும் கவுன்சிலிங்கில் முறைகேடு நடப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இதனை கண்டித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Samayam Tamil 16 Sep 2021, 10:03 am
தருமபுரி அரசு கலை கல்லூரியில் 2021-ஆம் ஆண்டிற்கான 22 துறைகளுக்கு விண்ணப்பம் செய்த மாணவ-மாணவிகளுக்கு சேர்க்கைக்கான பொது கலந்தாய்வு நாள்தோறும் தொடர்ந்து ஒவ்வொரு துறை படிப்புக்கும் நடைபெற்று வருகிறது.
Samayam Tamil தர்ணாவில் கல்லூரி மாணவர்கள்
தர்ணாவில் கல்லூரி மாணவர்கள்


இந்த நிலையில் இன்று அறிவியல், கணிதம், கணினி அறிவியல் ஆகிய துறைக்கான பொது கலந்தாய்வில் விண்ணப்பித்த தர்மபுரி மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதியை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் தங்களது பெற்றோருடன் கலந்து கொண்டனர்.

இந்த கலந்தாய்வில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு கல்லூாி நிர்வாகத்தின் சார்பில் எந்த ஒரு அடிப்படை வசதியும் செய்து தரவில்லை எனவும், மேலும் இந்த கலந்தாய்வில் சம்மந்தப்பட்ட கல்லூரி நிர்வாகம், தங்களுக்கு தெரிந்தவர்கள், உயர் அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்களின் சிபாரிசுகளுக்கு மட்டுமே தகுதி இல்லாதவர்களாக இருந்தால் கூட துறை ஒதுக்கீடு செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேலும் தகுதியுடைய நபர்களுக்கு அவர்களுக்குரிய துறையை ஒதுக்கீடு செய்வதில் பாரபட்சம் செய்து கலந்தாய்வில் முறைகேடு செய்து வருவதாக கூறி, சம்மந்தப்பட்ட நிர்வாகம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அரசு கலைக் கல்லூரி வளாகத்திலேயே கலந்தாய்வுக்கு வந்த மாணவ-மாணவிகள் தங்களது பெற்றோருடன் திடீரென இரவு 8.30 மணிக்கு மேல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த போராட்டம் தொடர்பாக தகவல் அறிந்து வந்த அதியமான்கோட்டை போலீசார் மற்றும் சம்மந்தப்பட்ட கல்லூரி முதல்வர் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆரம்ப பள்ளிகள் திறப்பு; முதல்வர் முடிவு இதுதான்!

இந்த பேச்சுவார்த்தை சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்றது. பேச்சு வார்த்தைக்கு பிறகு உங்களது கோரிக்கை குறித்து உரிய விசாரணை நடத்தப்படுவதுடன், இந்த பொது கலந்தாய்வில் உரிய மதிப்பெண் அடிப்படையிலேயே அரசு விதிமுறைப்படி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

1 முதல் 8ம் வகுப்பு வரை.. பள்ளிகள் திறப்பு; அமைச்சர் அன்பில்மகேஷ் முக்கிய தகவல்!

இதில் எவ்வித முறைகேடும் நடைபெறவில்லை என சம்மந்தப்பட்ட கல்லூரி நிர்வாகம் கூறியும், இதனை ஏற்க மறுத்தனர். தொடர்ந்து முறைகேட்டை கண்டுபிடித்து தகுதியான மாணவ- மாணவிகளுக்கு மட்டுமே சம்மந்தப்பட்ட துறை படிப்பை ஒதுக்கீடு செய்து தர வேண்டுமென தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ரேஷன் ஊழியர்களுக்கு திடீர் உத்தரவு; கண்டிப்பா பின்பற்றவும் அறிவுறுத்தல்!

இதையடுத்து மாணவர்களிடம் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி உங்கள் கோரிக்கைகளை மனுவாக எழுதி கொடுத்தால் அதை நான் மேலிடத்திற்கு அனுப்பி அதற்கான தீர்வு காணுவதற்கு ஏற்பாடு செய்து தரப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. இதன் பிறகு மாணவர்கள் அனைவரும் எழுதி கையொப்பமிட்டு கல்லூரி முதல்வரிடம் தந்து கலைந்து சென்றனர்.

உள்ளாட்சி தேர்தல் தள்ளிவைப்பு? -முதலமைச்சர் திடீர் ஆலோசனை!

கல்லூாி முதல்வாிடம் கேட்கும்போது, இடஒதுக்கீடு அடிப்படையில் மாணவா்களுக்கு சோ்க்கை நடைபெறுகிறது என்றும், மாணவா்கள் மத்தியில் தவறான புாிதல் உள்ளதாலேயே மாணவர்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா் எனவும் தொிவித்தாா்.

அடுத்த செய்தி