ஆப்நகரம்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: பேரூராட்சி இட ஒதுக்கீடு விபரம்!

தருமபுரி மாவடத்தில் உள்ள 10 பேரூராட்சிகளின் இட ஒதுக்கீடு பட்டியல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 21 Jan 2022, 3:54 pm

ஹைலைட்ஸ்:

  • தமிழ்நாட்டில் விரைவில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்
  • தருமபுரி மாவட்ட பேரூராட்சிகள் யாருக்கு?

ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil Tamil Nadu nagar panchayat election
கோப்புப்படம்
தமிழ்நாட்டில் 2016ஆம் ஆண்டு நடைபெற வேண்டிய உள்ளாட்சித் தேர்தல் பல்வேறு காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டது. இதனால், மத்திய அரசிடமிருந்து உள்ளாட்சிகளுக்கு கிடைக்க வேண்டிய நிதி கிடைக்கவில்லை. இதனால் பல ஊர்கள் ஐந்தாண்டுகளாக அடிப்படை வசதிகளைக்கூட பூர்த்தி செய்ய முடியாமல் திணறுகின்றன.
கடந்த 2019 டிசம்பரில், ஊரக உள்ளாட்சி தேர்தல் மட்டும் நடைபெற்றது. புதிய மாவட்டங்கள் பிரித்ததால் அப்போதும் 9 மாவட்டங்களுக்கு தேர்தல் நடைபெறவில்லை. 2021 அக்டோபர் மாதம் விடுபட்ட மாவட்டங்களுக்கான தேர்தல் நடைபெற்றது.

ஆனாலும், 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை. 4 மாதங்களுக்குள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டுமென்று, தமிழ்நாடு அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
தருமபுரிக்கு குவியும் அரசு திட்டங்கள்… முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தது என்ன?

இதனிடையே, தருமபுரி நகராட்சி மற்றும் அரூர், கடத்தூர், காரிமங்கலம், பாலக்கோடு, பாப்பாரப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி, மாரண்டஹள்ளி, பென்னாகரம், கம்பைநல்லூர், பொ.மல்லாபுரம் ஆகிய 10 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது.

அதில், பாப்பிரெட்டிபட்டி, பொ.மல்லாபுரம், கடத்தூர் பேரூராட்சிகள் ஆதிதிராவிடர் பொதுப்பினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.அரூர் பேரூராட்சி பெண்கள் பொதுப்பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

கடந்தாண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் தருமபுரி மாவட்டத்தில் திமுகவுக்கு ஒரு சட்டமன்ற உறுப்பினர் கூட இல்லாத நிலையில் எப்படியாவது, தருமபுரி நகராட்சியை கைப்பற்ற வேண்டுமே ஆளுங்கட்சியான திமுக திட்டமிட்டுள்ளது. அதனால் அந்த நகராட்சியில் உள்ள 33 வார்டுகளிலும் பொதுமக்களின் வாக்குகளை பெற அக்கட்சியினர் தீவிரம் காட்டி வருகின்றனர். அதேபோல் பாப்பிரெட்டிப்பட்டி, அரூர், பென்னாகரம் உள்ளிட்ட முக்கிய பேரூராட்சிகளை கைப்பற்ற அதிமுக - திமுக இடையே கடும் போட்டி நிலவுவதாக கூறப்படுகிறது.

அடுத்த செய்தி