ஆப்நகரம்

ஜம்மு- காஷ்மீரில் இறந்த ராணுவ வீரர்; இந்த ஊரில் 42 குண்டுகளுடன் அடக்கம்!

ஜம்மு-காஷ்மீரில் நடந்த வாகன விபத்தில் தமிழக ராணுவ வீரர் உயிரிழந்தார். அவரது உடல் சொந்த ஊரான தர்மபுரி மாவட்டம் கம்மாளப்பட்டியில், 42 குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டது. ராணுவ வீரரின் மரணம் கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.

Samayam Tamil 6 Jun 2021, 11:32 am
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த கம்மாளப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சாமிநாதன். இவரது மனைவி சித்ரா. தம்பதியின் மூத்த மகன் பூபதி. கடந்த 2015 ம் ஆண்டு பூபதி ராணுவத்தில் சேர்ந்தார். இவருக்கு ஒரு தம்பி மற்றும் தங்கை உள்ளனர். பூபதிக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
Samayam Tamil ராணுவ வீரர் உடலுக்கு கலெக்டர் அஞ்சலி. உள்படம்: பூபதி
ராணுவ வீரர் உடலுக்கு கலெக்டர் அஞ்சலி. உள்படம்: பூபதி


கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு தனது தங்கை திருமணத்தை நடத்தி விட்டு பூபதி ராணுவத்துக்கு சென்றார். இந்த நிலையில் நேற்று முன்தினம் ஜம்மு-காஷ்மீரில் நடந்த வாகன விபத்தில் பூபதி உயிரிழந்தார்.

இதையடுத்து அவரது உடல் சொந்த ஊரான கம்மாளப்பட்டிக்கு ராணுவ வாகனத்தின் மூலம் கொண்டு வரப்பட்டது. பின்னர் அவர்களது வழக்கப்படி சடங்குகள் செய்யப்பட்டன.

இதனை தொடர்ந்து தர்மபுரி கலெக்டர் திவ்யதர்ஷினி மற்றும் சார் ஆட்சியர் பிரதாப், பாலக்கோடு எம்எல்ஏ அன்பழகன் மற்றும் ராணுவ அதிகாரிகள் பூபதியின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

பிறந்த நாளில் சிறுவன் எடுத்த முடிவு; கிராம மக்கள் பாராட்டு!

இதன் பின்னர் 42 துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து அவருடைய உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பொதுமக்கள் திரண்டு வந்து இவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பூபதியின் மரணம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

அடுத்த செய்தி