ஆப்நகரம்

கிராம சபை கூட்டத்தில் சிறுவர்கள் கொடுத்த மனு.. கோரிக்கை என்ன தெரியுமா?

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பருவதனஹள்ளி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் கழிவுநீரை அகற்றக்கோரி சிறுவர்கள் மனு கொடுத்தனர்.

Samayam Tamil 16 Aug 2022, 12:31 pm
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் ஊராட்சி ஒன்றியம் பருவதனஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட முல்லை நகரில் இருந்து வெளியேறும் சாக்கடை நீர் தருமபுரி - பென்னாகரம் சாலையில் குட்டை போல் தேங்கி நிற்கின்றது.
Samayam Tamil dharmapuri news


இதனால் வாகன ஓட்டிகள், அக்கம் பக்கத்தினர் பெரிதும் பாதிக்கப்பட்டு வந்தனர். மேலும், சாலையில் தேங்கி நிற்கும் கழிவு நீரால் தொற்று நோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டது.

இந்த நிலையில் அப்பகுதியில் வசிக்கும் பள்ளி சிறுவர்கள் 4 பேர், நேற்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்ள முடிவெடுத்தனர். பின்னர் தங்கள் கோரிக்கைகளை பள்ளி சிறுவர்கள் மனுவாக எழுதி, பருவதனஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட புங்கமரத்து காட்டு கொட்டாய் கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டு ஊராட்சி நிர்வாகத்திடம் கொடுத்தனர்.
கே.பி.ராமலிங்கம் மருத்துவமனையில் அனுமதி - பென்னாகரம் நீதிமன்றத்தில் நடந்தது என்ன?

மனுவினை பெற்றுக் கொண்ட துணை வட்டார அலுவலர் பாலகிருஷ்ணன் ஊராட்சி மன்ற தலைவர் ராணி முனிராஜ் ஆகியோர் விரைவாக நடவடிக்கை எடுப்பதாக சிறுவர்களிடம் உறுதி அளித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட சிறுவர்கள் மகிழ்ச்சியுடன் வீட்டிற்கு திரும்பி சென்றனர்.

கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டு சிறுவர்கள் சாக்கடை கழிவு நீரை அகற்ற மனு கொடுத்த சம்பவத்தை அறிந்த பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்

அடுத்த செய்தி