ஆப்நகரம்

நாள்தோறும் அழுகுரலால் நோயாளிகள் அச்சம்; இந்த மருத்துவமனைல என்ன தான் நடக்குதோ!

தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நாள்தோறும் இறப்பு அதிகரித்து அழுகுரல் கேட்பதால் நோயாளிகள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையில் என்ன நடக்குதுன்னே தெரியலன்னு உறவினர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Samayam Tamil 12 May 2021, 9:20 am
தருமபுரி மாவட்டத்தில், கொரோனா இரண்டாவது அலை வேகமெடுத்துள்ளதால் தினமும் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதே போல் உயிர்பலியும் அதிகரித்து வருகிறது.
Samayam Tamil தருமபுரி அரசு மருத்துவமனை
தருமபுரி அரசு மருத்துவமனை


கொரோனா தொற்றுக்கு ஆளாகும் நோயாளிகள் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு நலமுடன் திரும்புவோம் என நம்பிக்கையில் சிகிச்சைக்கு வருகின்றனர். ஆனால் சிகிச்சை பலன் இன்றி கொரோனா நோயாளிகள் இறந்து விடுகின்றனர். இதுபோன்று தினமும் 5க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் இறக்கின்றனர்.

மருத்துவமனைக்கு வந்து இறக்கும் கொரோனா நோயாளிகளை அவரது உறவினர்கள் வீடுகளுக்கு கொண்டு செல்லாமல் மருத்துவமனை அருகே உள்ள நகராட்சி சுடுகாட்டிற்கு சென்று அங்குள்ள மின்சார எரிவாயு தகனமேடையில் எரித்து சாம்பலை மட்டும் வீட்டிற்கு கொண்டு செல்கின்றனர்.

குழந்தை வரம் தரும் தீர்த்தம்; வெறிச்சோடிய விசேஷ கோயில்!

தொடர்ந்து இறந்தவர்களை எரித்து வந்ததால் தற்போது மின்சார எரிவாயு தகனமேடை கருவி பழுதாகியதால் மருத்துவமனையில் இறந்த இரண்டு கொரோனா நோயாளிகளின் உடல்களை அடுத்தடுத்து கட்டைகள் வைத்து எரித்தனர்.

அரசு மருத்துவமனை அருகே சுடுகாடு உள்ளதால் மருத்துவமனையில் இறக்கும் கொரோனா நோயாளிகளை எரிக்கும் சுடுகாடாக தர்மபுரி நகராட்சி சுடுகாடு மாறியுள்ளது. இதனால் நோயாளிகள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.

அடுத்த செய்தி