ஆப்நகரம்

தோள் கொடுத்த தொண்டு நிறுவனங்கள்; கொரோனாவை தடுக்க கலெக்டரிடம் நிதி!

தருமபுரி மாவட்டத்தை சார்ந்த 4 தொண்டு நிறுவனங்கள் சார்பில் முதலமைச்சர் கொரோனா நிவாரண நிதிக்கு ரூ. 95 ஆயிரத்துக்கான காசோலை மாவட்ட ஆட்சியர் திவ்ய தர்ஷினியை சந்தித்து வழங்கப்பட்டது.

Samayam Tamil 9 Jun 2021, 11:21 am
தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தொற்றுப் பரவலை குறைக்கின்ற வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் போர்க்கால அடிப்படையில் பல்வேறு தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
Samayam Tamil கலெக்டரிடம் நிவாரண நிதி வழங்கப்படுகிறது
கலெக்டரிடம் நிவாரண நிதி வழங்கப்படுகிறது


அதன் பயனாக தற்பொழுது நோய் தொற்று வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. அரசின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு தொடர் நடவடிக்கைகளுக்கு உதவுகின்ற வகையில், இயன்ற அளவிலான நிதி உதவியினை “முதலமைச்சரின் பொது நிவாரண நிதி"-க்கு வழங்கிடுமாறு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.

அதனடிப்படையில் தமிழ்நாடு முதலமைச்சரின் வேண்டுகோளை ஏற்று தமிழக அரசு ஊழியர்கள், தொழிலதிபர்கள், திரைத்துறையினர் மற்றும் பொதுமக்கள் என பலர் தொடர்ந்து நிதி உதவி வழங்கி வருகின்றனர்.

அதனடிப்படையில் இன்று தருமபுரியை சேர்ந்த விபிடீபி, சுருதி, பவர், மற்றும் விப்ரோ ஆகிய 4 தொண்டு நிறுவனங்கள் சார்பாக ரூ. 95 ஆயிரத்துக்கான காசோலையை தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தடங்கம் சுப்ரமணி முன்னிலையில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் திவ்ய தர்ஷினியிடம் வழங்கினர்.

தம்பியுடன் அமைச்சர் செந்தில்பாலாஜி அடாவடி; அதிமுக ஒன்றிய செயலாளர் திடீர் குற்றச்சாட்டு!

இந்த நிகழ்வில் தொண்டு நிறுவனத்தை சார்ந்த நிர்வாகிகள் சின்னசாமி, மகாதேவ்யா, செல்வராஜ், வெங்கடேசன் ஆகியோர் உடனிருந்தனர்.

அடுத்த செய்தி