ஆப்நகரம்

டோல்கேட் கட்டணம் செலுத்த தயக்கம்; திசை மாறிய லாரி விபத்தில் சிக்கியது!

தருமபுரி அருகே டோல்கேட்டில் கட்டணம் செலுத்துவதற்கு தயங்கிய டிரைவர் லாரியை வேறு திசையில் இயக்கியபோது விபத்து ஏற்பட்டது. இதில் டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

Samayam Tamil 25 Jul 2021, 7:31 pm
ஆந்திராவில் இருந்து கோயம்புத்தூருக்கு 30 டன் சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிகொண்டு லாரி வந்துகொண்டு இருந்தது. இந்த லாரியை டிரைவர் ரமேஷ் என்பவர் ஓட்டி வந்தார்.
Samayam Tamil தலைக்குப்புற கவிழ்ந்த லாரி
தலைக்குப்புற கவிழ்ந்த லாரி


இன்று அதிகாலை தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த கடத்தூரில் இருந்து பொம்மிடி செல்லும் சாலையில் திண்டலானூர் அருகே வந்து கொண்டிருந்த போது, சாலையின் நடுவே இருந்த தடுப்பு சுவர் மீது லாரி மோதியதில் லாரி தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் லாரியை ஓட்டி வந்த டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த வந்த கடத்தூர் காவல் துறையினர் தீவிரமாக விசாரணை செய்தனர்.

சூதாட்ட கிளப்பில் 10 ஆண்டுகளாக கட்டிங்; போலீஸ் இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ இடமாற்றம்!

அதில், நல்லம்பள்ளி தொப்பூர் வழியாக செல்ல வேண்டிய லாரியை டோல்கேட்டிற்கு பயந்து கடத்தூர் வழியாக இயக்கியதும், லாரி ஓட்டுனர் தூக்க கலக்கத்தின் காரணமாக லாரி தடுப்பு சுவரின் மீது மோதி கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதும் தெரியவந்தது.

அடுத்த செய்தி