ஆப்நகரம்

மணல் லாரியை விரட்டிய போலீஸ்; பிறகு தான் அந்த சம்பவம் நடந்தது!

தர்மபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அடுத்த ராசிக்குட்டை பகுதியில் மணல் கடத்திச் சென்ற டிப்பர் லாரியை போலீசார் துரத்தி சென்றபோது டிரான்ஸ்பார்மர் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதனால் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

Samayam Tamil 8 Jun 2021, 6:41 pm
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்துள்ள அ.மல்லாபுரத்தை சேர்ந்தவர் ரவி (45). இவர், நேற்று நள்ளிரவு 12 மணிக்கு சின்னாற்றில் இருந்து லாரியில் மணல் எடுத்துக்கொண்டு மாரண்டஅள்ளி நோக்கி வந்துள்ளார். இதனை அறிந்த போலீசார் மணல் லாரியை பிடிக்க அவரை துரத்தி சென்று உள்ளனர்.
Samayam Tamil டிரான்ஸ்பார்மரில் மோதி நிற்கிறது லாரி
டிரான்ஸ்பார்மரில் மோதி நிற்கிறது லாரி


இதனால் லாரி தாறுமாறாக ஓடியதால் ராசிக்குட்டை என்ற இடத்தில் சாலை ஓரத்தில் இருந்த மின்சார டிரான்ஸ்பார்ம் மீது லாரி மோதி நின்றது. உடனே மணல் கடத்தி வந்த ரவி அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவானார்.

கல்லால் தாக்கி மனைவி கொலை; சின்ன காரணத்துக்கா இந்த முடிவு?

இதனை அடுத்து போலீசார் மணலுடன் இருந்த டிப்பர் லாரியை மீட்டு காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். மேலும் தப்பி ஓடிய டிரைவர் ரவியை போலீசார் தேடி வருகின்றனர். மணல் கடத்தலின் போது டிரான்ஸ்பார்மர் மீது லாரி மோதிய விபத்தில் சுற்றி உள்ள கிராமங்களுக்கு நேற்று மாலை வரை மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

அடுத்த செய்தி