ஆப்நகரம்

வலையில் குவியும் மீன்கள்.. அடியோடு குறைந்த விலை.. ஒகேனக்கல் சுற்றுலா பயணிகள் ஹேப்பி!

ஒகேனக்கல்லுக்கு வரும் சுற்றுலா பயணிகள் பரிசல் சவாரி செய்யவும், குளிக்கும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளதாலும், மீன்கள் குறைந்த விலையில் கிடைப்பதாலும் சுற்றுலா பயணிகள் மீன்களை வாங்கி சமைத்து சாப்பிட்டு மகிழ்ச்சி அடைந்தனர்.

Curated byPoorani Lakshmanasamy | Samayam Tamil 19 May 2022, 5:08 pm

ஹைலைட்ஸ்:

  • ஒகேனக்கல் காவிரி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு
  • வெள்ள நீரால் அடித்து வரப்படும் மீன்கள்
  • மீன் விலை குறைந்துள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil வலையில் குவியும் மீன்கள்
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் மீனவர்கள் வலையில் அதிக மீன்கள் சிக்குவதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் கடந்த இரு தினங்களாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஒகேனக்கல்லில் உள்ள அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. மேலும் அப்பகுதியில் உள்ள மீனவர்கள் காவிரி ஆற்றில் கிடைக்கும் மீன்களை பிடித்துவந்து சுற்றுலா பயணிகளுக்கு சுட சுட மீன் குழம்பு மற்றும் மீன் வறுவல் செய்து கொடுப்பார்கள்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

தற்போது காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் ஆற்றில் மீன் பிடிக்க மீனவர்கள் விரித்த வலையில் ஏராளமான மீன்கள் சிக்குவதால் மீனவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். புதிய தண்ணீரில் மீன்கள் ஒகேனக்கல் ஆற்றில் மீன் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் மீன்களின் விலை குறையத் துவங்கியுள்ளது. 300 ரூபாய்க்கு விற்கக்கூடிய மீன் 150 முதல் 200 ரூபாய் வரையும், 500 ரூபாய்க்கு விற்கக்கூடிய மீன்கள் 300 ரூபாய் வரை விலை குறைந்துள்ளது.

மீண்டும் ஆவின் விலை குறைப்பு? கிருஷ்ணகிரியில் குளறுபடி!

தற்போது ஒகேனக்கல்லுக்கு வரும் சுற்றுலா பயணிகள் பரிசல் சவாரி செய்யவும், குளிக்கும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளதாலும், மீன்கள் குறைந்த விலையில் கிடைப்பதாலும் சுற்றுலா பயணிகள் மீன்களை வாங்கி சமைத்து சாப்பிட்டு செல்கின்றனர்.
எழுத்தாளர் பற்றி
Poorani Lakshmanasamy

அடுத்த செய்தி