ஆப்நகரம்

தர்மபுரியில் பஞ்சம்: 20 ஆண்டுகளாக தண்ணீருக்கு அல்லாடும் அவலம்

தர்மபுரி அருகே 20 ஆண்டுகளுக்கு மேலாக தண்ணீர் இல்லாமல் கிராம மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

Samayam Tamil 28 Apr 2022, 3:42 pm
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த இண்டமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் பி.கே.பள்ளம் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அந்த கிராம மக்கள் அனைவரும் நடுத்தர மக்கள் கூட கிடையாது, அவர்கள் அன்றாட கூலி வேலை செய்தும் கால்நடை வளர்க்கும் தனது வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.
Samayam Tamil Dharmapuri Water Scarcity


இக்கிராம மக்களுக்கு குடிநீர் தேவைக்காக அப்பகுதியில் 2 க்கும் மேற்பட்ட கைப்பம்பு மற்றும் ஆழ்த்துளை கிணறு அமைத்து அதன் மூலம் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டது. இந்நிலையில் வறட்சியின் காரணமாக ஆழ்த்துளை கிணறுகள் வறண்டதால் குடிநீர் தேவைக்காக கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு புதியதாக குடிநீர் மேல்நிலை தொட்டி அமைக்கப்பட்டது. அதிலிருந்து வீடுகளுக்கு குடிநீர் வழங்க பைப்புகளும் அமைக்கப்பட்டது.

இந்த படிவத்தை பூர்த்தி செய்து கவர்ச்சிகரமான பரிசை வெல்லும் வாய்ப்பைப் பெறுங்கள்

ஆனால் அந்த மேல்நிலைதொட்டிக்கு இது வரை தண்ணீர் கொண்டு வரவில்லை, தண்ணீர் வரும் எதிர்பார்த்திருந்த அப்பகுதி மக்களுக்கு இது வரை தண்ணீர் வராததால் தண்ணீருக்காக சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிணறுகளில் தண்ணீர் எடுத்து வந்து பயன்படுத்துகின்றனர். சிலர் தண்ணீரை விலைகொடுத்து வாங்கி வருகின்றனர்.

இது குறித்து ஊராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை மனுகொடுத்தும் தங்கள் கிராமத்திற்கு தண்ணீர் வழங்க மறுப்பது எதற்கு என்று தெரியவில்லை எனவும், தண்ணீருக்காக தினமும் 5 கிலோ மீட்டர் தொலைவிற்கு காலிகுடங்களுடன் அலைவதாக அப்பகுதி பெண்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

குடிநீர் இல்லாததால் பள்ளிகளுக்கு செல்லும் மாணவ,மாணவிகள் மற்றும் பல்வேறு பணிகளுக்கு செல்வோர்கள் உரிய நேரத்திற்கு செல்ல முடியாத நிலை உள்ளதாகவும் வருத்தத்துடன் கூறினர்.

கடந்த 20 ஆண்டுகளாக தண்ணீர் பிரச்சனை தீர்க்க முடியாமல் உள்ளது. இதனால் தங்கள் கிராமத்திற்கு ஒகேனக்கல் கூட்டுகுடிநீர் வழங்கி தண்ணீர் பிரச்சனையை நிரந்தரமாக தமிழக அரசு தீர்க்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அடுத்த செய்தி