ஆப்நகரம்

வேட்பாளர் அனைவர் மனுவும் தள்ளுபடி, தள்ளிப்போகும் தேர்தல் தேதி: தருமபுரிக்கு வந்த சோதனை!

தருமபுரி மாவட்டத்தில் ஊராட்சி தலைவர் பதவிக்கு விண்ணபித்திருந்தவர் பழங்குடியினர் சாதி சான்றிதழ் வைக்கவில்லை எனக் கூறி வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Samayam Tamil 27 Sep 2021, 11:32 pm
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த குட்லாஅள்ளி ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட பழங்குடியினத்தைச் சேர்ந்த பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது.
Samayam Tamil வேட்பாளர் அனைவர் மனுவும் தள்ளுபடி, தள்ளிப்போகும் தேர்தல் தேதி: தருமபுரிக்கு வந்த சோதனை!


இதைத் தொடர்ந்து கடந்த, 15ஆம் தேதி வேட்புமனு தாக்கல் துவங்கியது. ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட அப்பகுதியை சேர்ந்த முனியம்மாள், 53, சிவந்தி,33, தின்னகுட்லஹள்ளியை சேர்ந்த ராணி,23 ஆகிய மூன்று பேர் பாலக்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தனர்.

செப்டம்பர் 23ஆம் தேதி அன்று மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டது. அதில் அவர்களின் வேட்பு மனு தாக்கல் விண்ணப்பத்தில் பழங்குடியினர், எஸ்டி, என்பதற்கான சாதி சான்றிதழ் இல்லாததல், அவர்களின் வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டது தெரியவந்தது.

இதனால் குட்லானஹள்ளி ஊராட்சி தலைவர் பதவிக்கு மீண்டும் தேர்தல் நாள் அறிவிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி