ஆப்நகரம்

லேடி கெட்டப்பில் ஒரு கேடி.. பழனியில் நிகழ்ந்த பரபரப்பு சம்பவம்!

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் பூட்டியிருந்த துணிக்கடையில் பெண் வேடமணிந்து நுழைந்த மர்ம நபர் பணத்தை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 7 Aug 2022, 10:18 am
திண்டுக்கல் மாவட்டம், பழனி பேருந்து நிலையம் அருகே அரசு மருத்துவமனைக்கு எதிரில் சிறுவர்களுக்கான ஆடைகள் மற்றும் விளையாட்டு பொருட்கள் விற்பனை செய்யும் கடை இயங்கி வருகிறது.
Samayam Tamil Palani Shop theft cctv


இந்தக் கடையின் மேற்கூரையை பிரித்து நேற்று முன்தினம் நள்ளிரவில் நுழைந்த மர்ம நபர் ஒருவர் பெண் போல் உடை அணிந்து பொருட்கள் மற்றும் திருடிச் சென்றுள்ளார்.

சனிக்கிழமை காலை வழக்கம்போல் கடையை திறந்த உரிமையாளர் சிக்கந்தர், கடையில் பொருட்கள் சிதறிக்கிடப்பதையும், கூரை பிரிக்கப் பட்டிருப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்து, பழனி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அடையாளம் தெரியாத நபரை தேடி வருகின்றனர். இந்நிலையில், திருட்டு குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

அதில், பெண் வேடமிட்ட நபர் ஒருவர் முகம் மற்றும் கைகளை மறைத்து கடைக்குள் நுழைவதும், சிசிடிவி கேமராக்களை திருப்பிவிட்டு, பொருட்கள் மற்றும் கல்லாவில் வைக்கப்பட்டிருந்த 3 ஆயிரம் ரூபாய் பணத்தையும் திருடிசெல்வது பதிவாகியுள்ளது.

இதனால் திருட வந்தநபர் பெண் வேடமிட்டு வந்தாரா? அல்லது உண்மையாகவே பெண் தானா? என்ற சந்தேகத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 24 மணிநேரமும் ஆள் நடமாட்டம் உள்ள பழனி நகரின்‌ மையப்பகுதியில் கடையின் மேற்கூரையை பிரித்து திருட்டு அரங்கேற்றப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி