ஆப்நகரம்

நூதன முறையில் ஆவின் பால் திருட்டு.. வீடியாவால் சிக்கிய ஊழியர்!

திண்டுக்கல் ஆவின் பால் பாக்கெட் தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலை செய்யும் பணியாளர் ஒருவர் பால் பாக்கெட் திருடிய வீடியோ வெளியாகியுள்ளது.

Samayam Tamil 27 Sep 2022, 12:21 pm
திண்டுக்கம் மாவட்டம், நத்தம் சாலையில் உள்ள சிப்காட் பகுதியில் தமிழ்நாடு அரசின் ஆவின் பால் உற்பத்தி நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு திண்டுக்கல், மதுரை பகுதியில் கூட்டறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மூலம் பெறப்படும் பால் கொண்டுவரப்பட்டு பதப்படுத்தப்படுகிறது.
Samayam Tamil dindigul Aavin milk theft


மேலும், பேக்கிங் செய்யப்பட்ட பால் விற்பனைக்காக தமிழகம் முழுவதும் அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த தொழிற்சாலையில் அடிக்கடி பால் திருடுபோவதாக அதிகாரிகளுக்கு தொடர் புகார்கள் வரத் தொடங்கின. குறிப்பாக நாளொன்றுக்கு 100 லிட்டர் வரை திருடுபோவது தெரியவந்தது.

விசாரணையில் அங்கு வேலை செய்யும் தொழிலாளர்களே இந்த வேலையில் ஈடுபட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், யார் என்ற விபரம் தெரியாமல் அதிகாரிகள் குழம்பிய நிலையில் இருந்தனர்.
இந்த நிலையில் ஆவின் ஊழியர் பால் பாக்கெட் திருடி இடுப்பில் மறைத்து வைத்தது போன்ற வீடியோ இணையத்தில் வேகமாக பரவியது.

இச்சம்பவ குறித்து திண்டுக்கல் ஆட்சியர் மற்றும் ஆவின் நிறுவன அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதன் அடிப்படையில் தொழில்நுட்ப பணியாளர் முகமது அஷ்ரப் உள்ளிட்ட மூவரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

அடுத்த செய்தி