ஆப்நகரம்

டயர் வெடித்து பறந்த கார்.. 2 குழந்தைகள் உட்பட 5 பேர் படுகாயம்.. வெளியான திக் திக் வீடியோ!

கார் டயர் திடீரென வெடித்ததில், பலமுறை உருண்டு விபத்துக்கு உள்ளாகும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.

Curated byPoorani Lakshmanasamy | Samayam Tamil 19 Jun 2022, 6:39 pm
சின்னாளபட்டி அருகே கார் டயர் வெடித்து விபத்து 5 பேர் காயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விபத்து குறித்த நெஞ்சை பதற வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது.‌
Samayam Tamil டயர் வெடித்து பறந்த கார்


திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் மோகன். இவர் வேலூரில் தனியார் செய்தித்தாள் நிறுவனத்தில் புகைப்படக்காரராக வேலை பார்த்து வருகிறார்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இந்நிலையில் இன்று அதிகாலை தனது சொந்த ஊரான திருநெல்வேலிக்கு காரில் தனது மனைவி சோனியா மற்றும் குழந்தைகள் அனுசியா (12), ஹேமா பிரபா (8) ஆகிய இரண்டு குழந்தைகளுடன் சென்று கொண்டிருந்துள்ளார். காரை டிரைவர் பிரபு ஓட்டி வந்துள்ளார்.

கார் மதுரை - திண்டுக்கல் நான்குவழிச் சாலையில் உள்ள போக்குவரத்து நகர் அருகே வந்த பொழுது காரின் இடது முன்பக்க டயர் வெடித்து சாலையின் ஓரத்தில் இருந்த பள்ளத்தில் உருண்டு விழுந்தது. காரில் பயணம் செய்த மோகன் அவரது மனைவி மற்றும் ஒரு குழந்தைக்கு லேசான காயம் ஏற்பட்டது.

நேருக்கு நேர் தாறுமாறாக மோதிக்கொண்ட சொகுசு கார்கள்.. ஒருவர் பலி, 7 பேர் படுகாயம்!

மற்றொரு குழந்தையான அனுசியாவிற்கு கை முறிவு ஏற்பட்டது. டிரைவர் மோகனுக்கு பலத்த காயம் ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இதுதொடர்பாக அம்பாத்துரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கார் விபத்து தொடர்பான பதறவைக்கும் சிசிடிவி கேமரா காட்சிகள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
எழுத்தாளர் பற்றி
Poorani Lakshmanasamy

அடுத்த செய்தி