ஆப்நகரம்

திண்டுக்கல் காமராஜர் பேருந்து நிலையம்; மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வு எடுக்கும் அறை குறித்து மேயரிடம் வாக்குவாதம்!

திண்டுக்கல் காமராஜர் பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வெடுக்கும் அறையை 24 மணி நேரமும் திறக்க கோரிக்கை

Curated byDhivya Thangaraj | Samayam Tamil 4 May 2023, 4:57 pm

ஹைலைட்ஸ்:

  • திண்டுக்கல் காமராஜர் பேருந்து நிலையம்

  • மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வு எடுக்கும் அறை

  • 24 மணி நேரமும் திறக்க கோரிக்கை
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வெடுக்கும் அறையை 24 மணி நேரமும் திறக்க திமுக மேயரிடம் வாக்குவாதம்
மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வெடுக்கும் அறையை 24 மணி நேரமும் திறக்க திமுக மேயரிடம் வாக்குவாதம்
காமராஜர் பேருந்து நிலையம்
திண்டுக்கல் காமராஜர் பேருந்து நிலையம் அமைந்துள்ளது. இங்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரக்கூடிய பேருந்துகள் மாநகராட்சியின் மையப் பகுதியில் உள்ள திண்டுக்கல் காமராஜர் பேருந்து நிலையத்திலிருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு செல்கின்றது. இந்நிலையில் பேருந்து நிலையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்காக காத்திருப்பு அறை பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சி ஆணையர் மற்றும் மேயர் இளமதி ஆய்வு
மாற்றுத்திறனாளிகளுக்கான காத்திருப்பு அறை சமீபத்தில் மாநகராட்சி ஆணையர் மற்றும் மேயர் இளமதி ஆய்வு செய்தனர். பகல் நேரங்களில் மட்டும் திறந்து வைக்கவும் இரவு நேரங்களில் அறையை பூட்டி விடவும் உத்தரவிட்டு சென்றுள்ளனர். அதனை கண்டித்து இன்று திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள திமுக மேயர் இளமதியிடம் நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் முதன்முறை.. லேப்ரோஸ்கோபிக் அறுவை சிகிச்சைக்கு பொதுமக்கள் வரவேற்பு..

வணிக வளாகத்தில் கடை ஒதுக்க கோரிக்கை
மேலும் திண்டுக்கல் காமராஜர் பேருந்து நிலையத்தில் இருந்து மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு அறையை மற்றும் கழிவறையை 24 மணி நேரமும் திறந்து வைக்கும் படியும், பேருந்து நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள வணிக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு என நான்கு கடைகள் ஒதுக்கி தரவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திமுக மேயர் இளமதியிடம்வாக்குவாதம்
அதனை தொடர்ந்து இந்த கோரிக்கைகள் தவறு பட்சத்தில் போராட்டங்கள் நடத்தப் போவதாகவும், மாற்றுத்திறனாளிகள் தெரிவித்துள்ளனர். மாற்றுத்திறனாளிகள் திமுக மேயர் இளமதியிடம் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் திண்டுக்கல்லில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த காத்திருக்கும் அரையானது அமைக்கப்பட்டதன் நோக்கம் வெளியூர்களில் இருந்து வருகை தரும் மாற்றுத்திறனாளிகள் பயணிகள் களைப்பு போக அமர்ந்து ஓய்வெடுப்பதற்காகவும், தங்களது பயணத்தை தொடர்வதற்காகவும் தான்.

சங்க கூட்டம்
இந்நிலையில் கடந்த சில நாட்களாக திண்டுக்கல்லில் மாற்றுத்திறனாளிகளுக்கான சங்கம் நடத்தும் சில நபர்கள் இந்த காத்திருக்கும் அறையை அபகரித்துள்ளனர். காலை 9 மணி அளவில் காத்திருக்கும் அறைக்கு வரும் நபர்கள் இரவு 9 மணி வரையும் அந்த அறையிலேயே தங்கி இருந்து சங்க கூட்டம் நடத்துவதாகதெரிவித்துள்ளனர் .

மாற்றுத்திறனாளிகளுக்கான தேவைகள்
மேலும் தங்கள் சங்கத்திற்கு ஆள் சேர்க்கவும் பயன்படுத்தி வருவதாக மாற்றுத்திறனாளிகள் புகார் தெரிவித்துள்ளனர். மேலும் எங்களுடைய கோரிக்கைகள் நிறைவேறாமல் முழுக்க சங்க அலுவலகமாக செயல்படுவதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் தெரிவித்தனர்.

மேலும் அந்த காத்திருக்கும் அறையில் வெஸ்டர்ன் கழிப்பறை, குடிநீர், வீல்சேர், கைப்புடிப்புடன் கூடிய சாய்வு தளம் உள்ளிட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான தேவைகள் அனைத்தும் வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
எழுத்தாளர் பற்றி
Dhivya Thangaraj

அடுத்த செய்தி