ஆப்நகரம்

விவசாய தோட்டங்களில் முகாமிட்டுள்ள காட்டு யானைகள்; இரண்டாவது நாளாக விரட்டும் பணியில் வனத்துறை!

பழனி அருகே விவசாய தோட்டங்களில் முகாமிட்டுள்ள காட்டு யானைகளை காட்டுக்குள் விரட்டும் பணியில் இரண்டாவது நாளாக வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

Curated byPoorani Lakshmanasamy | Samayam Tamil 13 Aug 2022, 4:57 pm

ஹைலைட்ஸ்:

  • பழனி அருகே விவசாய தோட்டங்களில் முகாமிட்டுள்ள காட்டு யானைகள்
  • காட்டு யானைகளை காட்டுக்குள் விரட்டும் பணியில் இரண்டாவது நாளாக வனத்துறை
  • விவசாயிகள் தங்கள் விவசாய நிலங்களுக்கு பாதுகாப்பாக சென்று வர அறிவுறுத்தல்
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil விவசாய தோட்டங்களில் முகாமிட்டுள்ள காட்டு யானைகள்
திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்துள்ள மேற்கு தொடர்ச்சி வனப்பகுதியில் காட்டு யானைகள், மான்கள் உள்ளிட்ட பல வன விலங்குகள் வசித்து வருகிறது. இந்நிலையில் வனவிலங்குகள் வனத்தை ஒட்டிய விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தும் நிகழ்வுகள் அவ்வப்போது நடைபெற்று வருகிறது.
பழனியருகே உள்ள ஆயக்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட சட்டப்பாறை பகுதியில் உள்ள விவசாய தோட்டங்களில் குட்டி யானை ஒன்றுடன் நான்கு யானைகள் நுழைந்தன. இதனால் விவசாயிகள் தங்கள் நிலங்களுக்குச் செல்ல அச்சமடைந்துள்ளனர். யானை கூட்டமானது தோட்டங்களில் உள்ள பயிர்களை நாசம் செய்து வருவதாக தகவல் கிடைத்ததை அடுத்து, ஒட்டன்சத்திரம் வனத்துறையினர் காட்டு யானைகளை விரட்டும் பணியில் ஈடுப்டடனர்.

பேருந்து நிறுத்தத்தை மறைத்த திமுக நிர்வாகியின் பிறந்தநாள் பேனர்; பொதுமக்கள் குமுறல்!

பட்டாசுகளை வெடித்து யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் திருப்பி அனுப்பும் பணியில் நேற்றுமுதல் ஈடுபட்டுவரும் நிலையில், இரண்டாவது நாளான இன்றும் யானைகளை வனப்பகுதிக்குள் பணியில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும்வரை அப்பகுதி விவசாயிகள் தங்கள் விவசாய நிலங்களுக்கு பாதுகாப்பாக சென்று வரவும் வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
எழுத்தாளர் பற்றி
Poorani Lakshmanasamy

அடுத்த செய்தி