ஆப்நகரம்

வத்தலகுண்டு பகுதியில் புதிய ஆண்கள் கலைக்கல்லூரி: கோரிக்கை விடுத்த தேன்மொழி எம்எல்ஏ!

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வத்தலகுண்டு பகுதியில் புதிய ஆண்கள் கலைக்கல்லூரி ஏற்படுத்தித் தர நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் தேன்மொழி கோரிக்கை விடுத்துள்ளார்.

Curated bySrini Vasan | Samayam Tamil 10 May 2022, 12:24 pm

ஹைலைட்ஸ்:

  • ஆண்களுக்கு தனிக் கலைக்கல்லூரி கேட்ட பெண் சட்டமன்ற உறுப்பினர்
  • அமைச்சர் பொன்முடி பதில்
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil தேன்மொழி
இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தில் காவல், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் மானியக் கோரிக்கை நடைபெற்றது.
அதற்கு முன்பு நடைபெற்ற சட்டப்பேரவை கேள்வி நேரத்தின் போது பேசிய நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் தேன்மொழி , "திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி பொருளாதாரத்தில் பின்தங்கிய பகுதி. இந்த பகுதியில் உள்ள மாணவர்கள் அதிக கட்டணம் செலுத்தி திண்டுக்கல், மதுரையில் படித்து வருகின்றனர்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

எனவே, வத்தலகுண்டு பகுதியில் அரசுக்கு சொந்தமான இடம் இருப்பதை கருத்தில் கொண்டு அங்கு புதிய ஆண்கள் கலைக்கல்லூரி ஏற்படுத்தித் தர அரசு முன் வருமா? என கேள்வி எழுப்பினார்

இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் பொன்முடி, "இருபாலர் கல்லூரி இருக்கக்கூடிய இடத்தில் பெண்கள் கல்லூரி வேண்டும் என்கின்றனர். அந்த ஊரில் கலைஞர் ஆட்சியில் தான் பெண்கள் கல்லூரி துவங்கப்பட்டது.

ஒட்டன்சத்திரம் மார்க்கெட்; லேட்டஸ்ட் காய்கறி விலை நிலவரம்!
அங்கே பெண்கள் கல்லூரி இருப்பதால் உறுப்பினர் ஆண்களுக்கு கல்லூரி கேட்டிருக்கிறார்.

அமைச்சர் ஐ.பெரியசாமி திண்டுக்கல்லுக்கு கூட்டுறவுத் துறையின் மூலமாக ஒரு கல்லூரியை பெற்றுள்ளார். மேலும், திண்டுக்கல் ஓரளவிற்கு கல்வி வளர்ச்சி பெற்ற மாவட்டம்.

எனவே, அந்த பகுதிகளுக்கு படிப்படியாக வரும் காலங்களில் நிதிநிலையை கருத்தில் கொண்டு அரசு முடிவு செய்யும்", என்றார்.
எழுத்தாளர் பற்றி
Srini Vasan

அடுத்த செய்தி