ஆப்நகரம்

கோர்ட்டில் பணிச்சுமை?; எலி மருந்து சாப்பிட்ட பெண் ஊழியர்!

நீதிமன்ற பெண் ஊழியர் எலி மருந்து சாப்பிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Samayam Tamil 30 Mar 2022, 1:56 pm
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கன்னிவாடியை கிராமத்தை சேர்ந்தவர் சூர்யா. இவரது கணவர் மகுடீஸ்வரன். சூர்யா தனது கணவருடன் வசித்து வருகிறார்.
Samayam Tamil தற்கொலைக்கு முயன்ற பெண் ஊழியர்
தற்கொலைக்கு முயன்ற பெண் ஊழியர்


பழனி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வரும் சூர்யா இன்று காலை அலுவலகத்தில் பணியில் இருந்தபோது திடீரென மயங்கி விழுந்துள்ளார்.

இதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த சக அலுவலர்கள் உடனடியாக சூர்யாவை மீட்டு பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து உள்ளனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் சூர்யா எலி மருந்தை சாப்பிட்டுள்ளது தெரிய வந்துள்ளது.


இதையடுத்து உடனடியாக சூர்யாவுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சைகளை அளித்து வருகின்றனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த பழனி நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விமான பயணிகள் ஷாக்; விண்ணை தொட்ட கட்டணம்!

இதற்கிடையே நீதிமன்ற பெண் ஊழியர் சூர்யா பணிச்சுமையின் காரணமாக எலி மருந்தை சாப்பிட்டு இருப்பது போலீசார் நடத்திய அதிரடி விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்த சம்பவம் அறிந்து திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி கிராம மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். அதே சமயம் பணிச்சுமையால் நீதிமன்ற பெண் ஊழியர் தற்கொலைக்கு முயன்று உள்ள சம்பவம் நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அடுத்த செய்தி