ஆப்நகரம்

H Raja arrest எச்.ராஜா அதிரடி கைது; எஸ்.பியிடம் தரக்குறைவு பேச்சால் நடவடிக்கை!

போலீஸ் சீருடையில் இருந்த எஸ்.பியை தரக்குறைவாக பேசிய பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவை போலீசார் கைது செய்தனர்.

Samayam Tamil 18 May 2022, 7:44 pm
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இந்து ஆலய பாதுகாப்பு குழு சார்பில் பழனி இடும்பன் கோவில் குளக்கரையில் மகா சங்கமம் ஆரத்தி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து இருந்தனர்.
Samayam Tamil கைது செய்யப்பட்ட எச்.ராஜா
கைது செய்யப்பட்ட எச்.ராஜா


இந்த நிகழ்வுக்கு சிறப்பு அழைப்பாளராக பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான ஹெச். ராஜா மற்றும் மன்னார்குடி செண்டலங்கர ஜீயர் ஆகியோர் கலந்து கொள்ள இருந்தனர்.

இந்த நிலையில் காவல் துறையினர் மதியம் 3 மணிக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ‘இந்த நிகழ்ச்சி நடத்துவதற்கு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் எழுத்துப்பூர்வமாக அனுமதி பெறவில்லை.

நிகழ்ச்சி இரவு நேரம் நடப்படுவதால் மின்சார ஏற்பாடுகள் குறித்து தகவல் தெரிவிக்கவில்லை. நிகழ்ச்சிக்கு பெண்கள் உட்பட 300க்கும் மேற்பட்ட வர இருப்பதால் போதிய இடவசதி இல்லை.

அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் மகன் நீக்கம்?; முதல்வரை சந்தித்ததால் எடப்பாடி கோபம்!

பக்தர்கள் எத்தனை வாகனங்களில் வருகை தருவார்கள் என்ற விபரம் அளிக்கவில்லை’ என கூறி மகா சங்கமம் ஆரத்தி நிகழ்ச்சிக்கு காவல் துறை அதிரடியாக அனுமதி மறுத்தது.

மேலும், பழனி காவல் உட்கோட்டம் முழுவதும் காவல் சட்டப்பிரிவு (30)2 அமலில் இருப்பதாக கூறி சட்டம் ஒழுங்கு பிரச்சனை, பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும் என்பதாக கூறிய காவல் துறையினர் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்துள்ளனர்.

இதை அறிந்த பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா போலீசாரின் உத்தரவை மீறி இந்த நிகழ்ச்சியை தலைமையேற்று நடத்த போவதாக அறிவித்துவிட்டு சம்பவ இடம் நோக்கி வந்துள்ளார்.

Sasikala: ஓயாமல் குடைந்து எடுக்கும் சசிகலா; ஒரு வழியாக முடிவுக்கு வந்த அதிமுக!

இதையடுத்து பழனி உட்கோட்ட காவல் பிரிவு எல்லை சத்திரப்பட்டியில் வைத்து, திண்டுக்கல் சரக டிஐஜி ரூபேஷ்குமார் மீனா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் தலைமையிலான 100க்கும் மேற்பட்ட போலீசார் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவை கைது செய்தனர்.

ஆனால் போலீசாரின் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு தராமல் ஹெச்.ராஜா கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும், சீருடை அணிந்திருந்த மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சீனிவாசனை மரியாதை குறைவாக பேசி கேவலப்படுத்தியதாக கூறப்படுகிறது.

ஆனாலும் எதை பற்றியும் கவலைப்படாமல் எச்.ராஜாவை போலீசார் அதிரடியாக கைது செய்து அழைத்து சென்றனர். இதனால் பழனியில் பெரும் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.

அடுத்த செய்தி