ஆப்நகரம்

திண்டுக்கல் கொடைக்கானல் பகுதியில் உடல் கருகிய நிலையில் வாலிபர்; போலீசார் தீவிர விசாரணை!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அப்சர்வேட்டரி பகுதியில் சென்னையை சேர்ந்த இளைஞர் உடல் கருகின் நிலையில் கிடந்துள்ளார்.

Curated byDhivya Thangaraj | Samayam Tamil 26 Apr 2023, 5:20 pm

ஹைலைட்ஸ்:

  • கொடைக்கானல் அப்சர்வேட்டரி பகுதி

  • வாலிபரின் உடல் கருகிய நிலையில் மீட்பு

  • போலீசார் தீவிர விசாரணை

ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil அப்சர்வேட்டரி பகுதியில் உடல் கருகிய நிலையில் வாலிபர்
அப்சர்வேட்டரி பகுதியில் உடல் கருகிய நிலையில் வாலிபர்
கொடைக்கானல் அப்சர்வேட்டரி பகுதி
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அப்சர்வேட்டரி பகுதியில் சென்னை கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த ஜெகதீஸ்வரர் என்ற இளைஞர் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார் அப்போது அப்சர்வேட்டரி பகுதிக்கு தினந்தோறும் பெண்கள் விறகு எடுத்து வர செல்வார்கள். இந்நிலையில் இன்று அவ்வாறு விறகு எடுக்க செல்லும் பெண்கள் அங்கு தீக்காயங்களுடன் எரிந்த நிலையில் இளைஞர் ஒருவர் இருப்பதனை கண்டனர் அதனை தொடர்ந்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

திண்டுக்கல்; பழனி அரசு மருத்துவமனை மருத்துவரின் வீட்டில் கொள்ளையடித்தவர்களில் மேலும் ஒருவர் கைது!
தீக்காயங்களுடன் எரிந்த நிலையில் இளைஞர்
மேலும் அந்த பெண்கள் உடலில் தீக்காயங்களுடன் எரிந்த நிலையில் இளைஞர் ஒருவர் வனப்பகுதியில் இருக்கிறார் என கொடைக்கானல் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்களுடன் தீயணைப்புத் துறையினர் அங்கு சென்று பார்த்தபோது ஜெகதீஸ்வரர் உடலில் தீக்காயங்களுடன் துணிகள் இன்றி இருந்துள்ளார்.

போலீசார் விசாரணை
அதனை தொடர்ந்து தீயணைப்புத்துறையினர் 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் உடல் கருகிய நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த ஜெகதீஸ்வரரை மீட்டு கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து கொடைக்கானல் காவல்துறையினர் ஜெகதீஸ்வரர் தற்கொலைக்கு தானாக முயன்றாரா இல்லை யாரேனும் தீ வைத்துள்ளனர் என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தேனி அரசு மருத்துவமனையில் அனுமதி

அதுமட்டுமின்றி இளைஞர்எதற்காக இவ்வாறு செய்தார் எனவும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் மேலும் அவருடைய குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் அவருக்கு கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக தற்போது தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
எழுத்தாளர் பற்றி
Dhivya Thangaraj

அடுத்த செய்தி