ஆப்நகரம்

பாபர் மசூதி இடிப்பு தினம்: பழனி முருகன் கோவிலில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் குவிப்பு!

டிசம்பர் 6 பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு பழனி முருகன் கோயிலுக்கு கூடுதல் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடுப்பட்டுள்ளது.

Curated byPoorani Lakshmanasamy | Samayam Tamil 4 Dec 2022, 6:04 pm

ஹைலைட்ஸ்:

  • டிசம்பர் 6 பாபர் மசூதி இடிப்பு தினம்
  • பாதுகாப்பு பணியில் தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீசார்
  • பழனி முருகன் கோவிலில் துப்பாக்கி ஏந்திய கூடுதல் போலீஸ் பாதுகாப்பு
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil பழனி முருகன் கோவிலில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் குவிப்பு
பழனி முருகன் கோவிலில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் குவிப்பு
டிசம்பர் 6 பாபர் மசூதி இடிப்பு நாளை தொடர்ந்து தமிழகம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிர படுத்த டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார் எனவே தமிழக முழுவதும் 1.20 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர் இதற்கான உத்தரவு டிஜிபி அலுவலகத்தில் இருந்து காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் கோவை குண்டுவெடிப்பு சம்பவம் மற்றும் திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை முன்னிட்டு அந்த மாவட்டங்களிலும் பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
தலைநகர் சென்னையில் முக்கிய ரயில்வே நிலையங்கள் மற்றும் கோடம்பாக்கம் பேருந்து நிலையங்களை தீவிரமாக கண்காணிக்கவும், சென்னையின் முக்கிய இடங்களில் ரோந்து பணியை மேற்கொள்ளவும் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலில் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக கூடுதலாக துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


1992ஆம் ஆண்டு, டிசம்பர் 6 ஆம் தேதி விஸ்வ இந்து பரிஷத்தின் ஆர்வலர்கள், பாரதிய ஜனதா கட்சி மற்றும் அதனுடன் இணைந்த அமைப்புகள் பேரணி நடத்தினர். பேரணி பின்னர் கலவரமாக மாறி 16ஆம் நூற்றாண்டை சேர்ந்த பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இது தொடர்பான வழக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதனையடுத்து டிசம்பர் 6 ஆம் தேதி பாபர் மசூதி இடிப்பு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய நாள்தோறும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் டிசம்பர் 6 பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு பழனி முருகன் கோயில் மலை மீதும் மலை அடிவாரத்திலும் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பறவைகளை வேட்டையாடினால் சிறை... வனத்துறை அமைச்சர் கடும் எச்சரிக்கை!

மலை மீது செல்லும் பக்தர்கள் கொண்டு செல்லும் பைகளும் போலீஸாரின் சோதனைக்கு பிறகே எடுத்துச்‌செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். பழனி நகரில் மக்கள் அதிகம் வந்து செல்லும் இடங்களான பேருந்து நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களிலும் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். டிசம்பர் 6 ம் தேதி பாபர் மசுதி இடிக்கப்பட்ட தினத்தில் சமுக‌ விரோதிகள் நாச வேலையில் ஈடுபடலாம் என்பதால் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
எழுத்தாளர் பற்றி
Poorani Lakshmanasamy

அடுத்த செய்தி