திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான ஏ கே எம் ஜி என்ற மதுபான கூடம் செயல்பட்டு வருகிறது. அங்கு சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான மது பிரியர்கள் வருகை தந்து வியாபாரம் விமர்சையாக நடைபெறும். இந்த நிலையில் அந்த மதுபான கூடத்திற்கு தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே புலிகுத்தி பகுதியில் சேர்ந்த முருகேஸ்வரன் (27) என்ற இளைஞர் மது குடிக்க வந்துள்ளார். அப்போது அங்கு அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் திடீரென முருகேஸ்வரன் அருகே வந்து அவரது கழுத்துப் பகுதியில் கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
கழுத்தில் பலமாக கத்தியால் குத்துப்பட்ட நிலையில் முருகேஸ்வரன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிரிழந்தார். இந்த கொலை குறித்து அங்கிருந்த நபர்கள் ஒட்டன்சத்திரம் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
தகவலை அறிந்ததும் தனியார் மதுபான கூட்டத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் உயிரிழந்த இளைஞர் முருகேஸ்வரனின் உடலை கைப்பற்றி ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு பிரயோக பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் கொலை குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணையை துவங்கினர்.
முடிவுக்கு வந்தது திருச்சி மக்களின் காத்திருப்பு - வாகன நெரிசலுக்கு குட் பை
முதற்கட்ட விசாரணையில் கொலை செய்த நபர் தனியாக வந்து முருகேஸ்வரனை கழுத்தில் குத்தி கொலை செய்ததால் அவர் முன்விரோதம் காரணமாக முருகேஸ்வரனை கொலை செய்திருக்கலாம் என காவல்துறையினர் தரப்பில் சந்தேகிக்கப்படுகிறது. தனியார் மதுபான கூடத்தில் இளைஞர் ஒருவர் கழுத்தில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டன்சத்திரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
கழுத்தில் பலமாக கத்தியால் குத்துப்பட்ட நிலையில் முருகேஸ்வரன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிரிழந்தார். இந்த கொலை குறித்து அங்கிருந்த நபர்கள் ஒட்டன்சத்திரம் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
தகவலை அறிந்ததும் தனியார் மதுபான கூட்டத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் உயிரிழந்த இளைஞர் முருகேஸ்வரனின் உடலை கைப்பற்றி ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு பிரயோக பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் கொலை குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணையை துவங்கினர்.
முடிவுக்கு வந்தது திருச்சி மக்களின் காத்திருப்பு - வாகன நெரிசலுக்கு குட் பை
முதற்கட்ட விசாரணையில் கொலை செய்த நபர் தனியாக வந்து முருகேஸ்வரனை கழுத்தில் குத்தி கொலை செய்ததால் அவர் முன்விரோதம் காரணமாக முருகேஸ்வரனை கொலை செய்திருக்கலாம் என காவல்துறையினர் தரப்பில் சந்தேகிக்கப்படுகிறது. தனியார் மதுபான கூடத்தில் இளைஞர் ஒருவர் கழுத்தில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டன்சத்திரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.