ஆப்நகரம்

தம்பியை அழைத்து வர சென்ற பள்ளி மாணவன்.. ஓவர்டேக் செய்ய முயன்று விபரீதம்.. லாரி மோதி பரிதாபமாக பலி!

தம்பியை அழைத்து வர இரு சக்கர வாகனத்தில் சென்ற பள்ளி மாணவன் மீது லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியான சோகம் நேர்ந்துள்ளது.

Curated byPoorani Lakshmanasamy | Samayam Tamil 29 Jun 2022, 4:40 pm

ஹைலைட்ஸ்:

  • தம்பியை அழைத்து வர இருசக்கர வாகனத்தில் சென்ற பள்ளி மாணவன்
  • சாலை விபத்தில் பள்ளி மாணவன் சம்பவ இடத்திலேயே பலி
  • சிவகிரி போலீசார் தீவிர விசாரணை
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil லாரி மோதி பள்ளி மாணவன் பலியான சிசிடிவி காட்சி
நாமக்கல் மாவட்டம் போடிநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மருதாச்சலம் டிரைவர். இவரது மனைவி சுலோச்சனா. இவர்கள் தற்போது ஈரோடு மாவட்டம் சிவகிரி அடுத்த சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள எல்பிஜி வீதியில் குடியிருந்து வருகின்றனர். இவர்களுக்கு கிரண் (16), அர்ஜுன் (14), பிரேம் (9) ஆகிய 3 மகன்கள் உள்ளனர். இதில் கிரண், அர்ஜூன் ஆகிய இருவரும் சிவகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11, 9ம் வகுப்பு படித்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை அர்ஜுன் அரசு பள்ளி வளாகத்தில் விளையாட சென்றுள்ளார். அவரை அழைத்து வருவதற்காக கிரண் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அம்மன் கோயில் அருகே செல்லும்போது எதிரே சென்ற ஈச்சர் வேனை முந்திச் செல்ல முயன்ற போது எதிரே வந்த லாரியில் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தென்மேற்கு பருவமழை எதிரொலி... முழு கொள்ளளவை எட்டுமா பவானிசாகர்?..

இதுகுறித்து சிவகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிரேதத்தை கைப்பற்றி கொடுமுடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து சிவகிரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
எழுத்தாளர் பற்றி
Poorani Lakshmanasamy

அடுத்த செய்தி