ஆப்நகரம்

ஒரே நாளில் எகிறிய கொரோனா; அச்சத்தில் உறைந்த மக்கள்!

ஒரே நாளில் எகிறிய கொரோனா பாதிப்பை கண்டு பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

Samayam Tamil 28 Jun 2022, 3:21 pm
ஈரோடு மாவட்டத்தில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த 2 வாரத்திற்கும் மேலாக, மீண்டும் அதிகரித்து வருகிறது. அதே நேரம் சிகிச்சையில் இருப்பவர்கள் குணம் அடைந்து தங்களது வீடுகளுக்கு திரும்பி வருகின்றனர்.
Samayam Tamil கொரோனா பரிசோதனை
கொரோனா பரிசோதனை


இந்த நிலையில் சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல் படி இன்று ஒரே நாளில் 8 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக மாவட்டத்தில் கொரோனாவால் மொத்தம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 32 ஆயிரத்து 764 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் சிகிச்சையில் இருந்த 5 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 1 லட்சத்து 31 ஆயிரத்து 985 பேர் பாதிப்பில் இருந்து குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.



இதுவரையிலும் கொரோனா பாதிப்புக்கு உள்ளான 734 பேர் சிகிச்சை பலன் இன்றி, உயிரிழந்து உள்ளனர். தற்போது மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளது.

கடலுக்குள் சென்ற மாடி வீடு; மீனவர் குடும்பத்தின் கதி?

கடந்த 21 நாட்களில் மட்டும் மாவட்டத்தில் 86 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மாவட்டத்தில் தற்போது தினசரி பாதிப்பு மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது.இதையடுத்து மாவட்ட சுகாதார துறையினர் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.

அடுத்த செய்தி